134% உயர்வு.. மகளிர் டி20 உலக கோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு.. உலக விளையாட்டு வரலாற்றில் ஐசிசி சாதனை

0
136
Australia and India

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் துபாயில் உள்ள ஷார்ஜாவில் நடைபெறஇருக்கிறது. இதற்காக அனைத்து சர்வதேச அணிகளும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக வீராங்கனைகளுக்கு இன்ப செய்தியை வழங்கியுள்ளது.

- Advertisement -

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் உள்ள ஷார்ஜாவில் வருகிற அக்டோபர் 3ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் கிரிக்கெட்டின் முன்னணி அணிகளான இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கிரிக்கெட் தொடரை பொருத்தவரை ஆண்கள் அணி விளையாடும் தொடர்களே பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ஈர்க்கப்பட்டன.

ஆனால் தற்போது சமீபகாலமாக முன்னணி வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக மகளிர் கிரிக்கட் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி உலகக் கோப்பைகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரண்டுமே சமமான பரிசுத்தொகையை பெறுகிற வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

அதாவது இந்த ஆண்டு நடைபெற்ற ஆடவர் டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையாக 2.45 மில்லியன் டாலர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் டி20 உலக கோப்பையில் 2.34 மில்லியன் அமெரிக்க டாலர்களை ( தோராயமாக ரூபாய் 19.6 கோடி) பரிசாக ஐசிசி அறிவித்திருக்கிறது.இது கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட 134 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த உலகக் கோப்பையில் தோல்வி அடையும் அணிக்கு 1.17மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படும். கடந்த ஆண்டு 50,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆப்கான் தென் ஆப்பிரிக்கா ODI.. இந்தியாவில் எப்படி பார்ப்பது.?.. போட்டி தொடங்கும் நேரம்.. முழு விபரம்

மேலும் அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகள் இரண்டுக்குமே 6,75,000 டாலர்கள் வழங்கப்படும். இந்த ஒட்டுமொத்த நிகழ்வுக்கான பரிசுத்தொகை 7,958,080 டாலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு ஜூலை 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர மாநாட்டில் எடுக்கப்பட்டதாகவும், பெண்கள் கிரிக்கெட் அணியை முன்னேற்றம் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வரலாற்றில் அதாவது உலக கோப்பை நிகழ்வுகளில் சமமான பரிசுத்தொகையை பெறும் உலகின் முதல் மற்றும் அணி விளையாட்டாக கிரிக்கெட் அமைய இருக்கிறது. ஐசிசி 2030ஆம் ஆண்டுக்கான அதன் அட்டவணையை விட ஏழு வருடத்திற்கு முன்பாகவே ஆண்கள் மற்றும் பெண்கள் பரிசுத்தொகை சமமாக அமையும் படி நடவடிக்கை எடுத்துள்ளது.

- Advertisement -