எந்த நாளா இருந்தாலும் இந்த விக்கெட்ல நான் 180 ரன்ன எடுப்பேன். இதெல்லாம் சாதாரணம் – ஹர்திக் பாண்டியா!

0
393
Hardik Pandya

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியில் வெகு எளிதாக கொல்கத்தாவை வீழ்த்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்று ஆறு வெற்றிகள் உடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 84, ஆண்ட்ரே ரசல் 34 ரன்கள் எடுக்க 20 ஓவர்களுக்கு 179 ரன்கள் வந்தது.

இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் 49, டேவிட் மில்லர் 32, விஜய் சங்கர் 51 ரன்கள் எடுக்க 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி குஜராத் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ” நாங்கள் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்த பொழுது நூர் மற்றும் லிட்டில் இருவரும் எங்களை ஆட்டத்தில் மீண்டும் கொண்டு வந்தார்கள். குர்பாஸ் நம்பிக்கையுடனும் தெளிவுடனும் பந்துகளை அடித்து விளையாடினார். நூர் மற்றும் லிட்டில் இருவரும் வந்து வீசியது கிரேட்.

- Advertisement -

இந்த விக்கெட்டில் எந்த நாளாக இருந்தாலும் நான் 180 ரன்களை எடுத்துக் கொள்வேன். ஒரு அணியாக சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும்.

அவர்கள் சூழ்நிலைக்கு மதிப்பளித்து விளையாடுகிறார்கள். நாங்கள் அதை எதிர்கொள்ள விரும்புகிறோம். அது நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது மற்றும் புத்திசாலித்தனமாக இருப்பது.

விஜய் சங்கர் பிட்டாக இருக்கிறார். அதிக தன்னம்பிக்கை உடன் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய வெற்றிகள் போட்டியை மாற்றுகிறது. சரியானவர்கள் சரியான இடத்திற்கு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். சரியானவர்களில் நிச்சயமாக விஜய் சங்கரும் ஒருவர்!” என்று கூறியிருக்கிறார்!