“நான் இன்னும் நிறைய கத்துக்கனும்.. அவுட் ஆன முறை ஏமாற்றமா இருக்கு” – ஜெய்ஸ்வால் ஓபன் பேட்டி!

0
222
Jaiswal

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

இந்த நிலையில் நேற்று டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக வந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இருவரும் மீண்டும் முதல் விக்கெட்டுக்கு சதம் தாண்டி 139 ரன்கள் சேர்த்தார்கள்.

ஜெய்ஸ்வால் ஒன்பது பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜேசன் ஹோல்டர் வெளியில் வீசிய பந்தை அடிப்பதற்கு போய், ஸ்லீப் திசையில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த முறை அவருக்கே அதிருப்தியை உண்டாக்கியது.

நேற்றைய நாள் ஆட்டம் முடிந்து பேசிய ஜெயஸ்வால் ” நிச்சயமாக நான் ஏமாற்றம் அடைந்தேன். இது கிரிக்கெட்டில் நடக்கக்கூடிய ஒன்று. நாம் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்த முறை இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பரவாயில்லை இது கிரிக்கெட்தான்.

- Advertisement -

ஒவ்வொரு முறையும் நான் அணிக்காக எவ்வளவு சிறப்பாக பங்களிக்க முடியும் மற்றும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே என் ஆசை. அணிக்கு ஆரம்பத்தில் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க எப்போது பேட்டிங் செய்தாலும் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று நினைப்பேன்.

நாம் ஆட்டம் இழந்து வெளியேறும் பொழுது ஏமாற்றமாகத்தான் இருக்கும். அடுத்த முறை என்ன செய்ய வேண்டும் என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டிற்காக விளையாடுவது, அழுத்தத்தை அனுபவிப்பது, சூழ்நிலையை அனுபவிப்பது, விக்கெட்டை ரசிப்பது எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.

அணியில் உள்ள மற்றும் பொதுவாக சீனியர்களுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு விஷயத்தை சொல்வதில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அவர்கள் சொல்வதில் என் விளையாட்டுக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை எடுத்து என் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்வேன். அவர்கள் அனுபவசாலிகள் எனவே அவர்கள் பேசும் ஒவ்வொரு முறையும் அதற்கு பின்னால் நிச்சயம் விஷயங்கள் இருக்கும். அவர்கள் தரும் தகவல்கள் விளையாட்டு பற்றிய விஷயங்கள் நம்ப முடியாத ஆச்சரியமானவை!” என்று கூறி இருக்கிறார்!