“சச்சினை தேவையில்லாமல் சீண்டினால் நான் உங்களை சும்மா விடமாட்டேன்!” – அக்தருக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய முன்னாள் வீரர்!

0
3381
Sachin

13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வர, முக்கிய ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்க சூடுப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி குறித்து எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இரு அணி ரசிகர்களையும் தாண்டி பொதுவாக கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் இந்தியா ஒரு தலைப்பட்சமாக மிக எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருந்தது.

இந்த வெற்றிக்கு முன்பாக பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தன்னுடைய சமூக வலைதளக் கணக்கில், தான் சச்சின் டெண்டுல்கரை முதல் பந்தில் கிளீன் போல்ட் ஆக்கிய புகைப்படத்தை வெளியிட்டு, இன்றும் இதே போல் நடக்குமா என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு அடுத்து இந்தியா வென்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் அந்த பதிவை எடுத்து அதற்கு நகைச்சுவையாகப் பதிலடி கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் இது பரபரப்பான விஷயமாக சமூக வலைதளத்தில் இருந்தது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் தன்னுடைய எதிர் வினையை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள அவர் “அக்தர் பாய் ஏன் இப்பொழுதும் இப்படியே எழுதுறிங்க? இதுக்கு பதிலடி நாங்க உங்களுக்கு ரொம்ப ஈஸியா திருப்பி தர முடியும். அக்தர் சச்சின் பாஜியை அங்கும் இங்குமாக சில முறை ஆட்டம் இழக்க வைத்திருக்கிறார்.

ஆனால் சச்சின் அக்தரை ஒரு ஸ்பின்னர் போல் பல நேரங்களில் விளையாடி இருக்கிறார். நான் உங்கள் தீவிர ரசிகன், ஆனால் நீங்கள் சச்சினை இப்படியே ஏதாவது செய்தால், நாங்கள் உங்களை சும்மா விட மாட்டோம்!” என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்!