நானே பினிஷ் பண்ணனும்னு இருந்தேன்; ஆனா எங்ககிட்ட இந்த வருஷம் கிரேட் பினிஷர் இருக்காரே.. அவுட்டானாலும் கவலையே இல்லாம இருந்தேன் – ஆட்டநாயகன் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

0
2276

போட்டியை நான் உள்ளே இருந்து பினிஷ் செய்து கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இந்த வருடம் எங்களிடம் சிறந்த பினிஷர் இருக்கிறார அவர் நேர்த்தியாக முடித்து விட்டார் என்று பேசியுள்ளார் ஆட்டநாயகன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது.

- Advertisement -

180 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் நித்திஷ் ராணா இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். ஆனால் இவர்களால் கடைசி வரை நின்று பினிஷ் செய்து கொடுக்க முடியாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.

கடைசியில் வந்த ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங் இருவரும் போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று பினிஷ் செய்து கொடுத்தனர். இதில் ரஸ்ஸல் 42 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ரிங்கு சிங் 10 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார்.

கடைசி ஓவர் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை அடித்து போட்டியை கொல்கத்தா அணிக்காக மீண்டும் ஒருமுறை அபாரமாக ஃபினிஷ் செய்து கொடுத்தார் ரிங்கு சிங்.

- Advertisement -

23 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் உட்பட 42 ரன்கள் அடித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது:

“இந்தப் பிட்ச்சில் பால் சற்று நின்று வந்தது. ஆகையால் கணித்து அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். அந்த திட்டத்தில் தெளிவாக இருந்தோம். ஒருவேளை பந்துவீச்சாளர்கள் தங்களது லென்த்தை மிஸ் செய்தால் அப்போது பேட்டை சுழற்றலாம் என்றும் நானும் ரிங்கு சிங் இருவரும் பேசிக்கொண்டோம்.

கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இருந்தபோது, இலக்கை எளிதாக எட்ட முடியும் என்று தோன்றியது. மேலும் நான் அடிக்க செல்கிறேன் என்று ரிங்கு சிங் இடம் கூறினேன். முதல் பந்தை பெரிதாக கஷ்டப்படாமல் தூக்கி அடித்தேன். சிக்ஸர் சென்றது. இரண்டாவது பந்தை பாயிண்ட் திசையில் தூக்கி அடித்தபோது அதுவும் சிக்ஸர் சென்றதால் வேலை எளிதாகி விட்டது. நானே உள்ளே நின்று ஆட்டத்தைப் பினிஷ் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த வருடம் எங்களிடம் தான் சிறந்த ஃபினிஷர் இருக்கிறாரே.

ஒருவேளை பந்தை தவறவிட்டால் என்ன செய்வது என்று நான் மற்றும் ரிங்கு சிங் இருவரும் பேசிக்கொண்டோம். உடனடியாக ரன் ஓடி வந்துவிடவா? என்று அவர் கேட்டார். நானும் சரி என்று கூறி விட்டேன். அப்படித்தான் அந்த ரன் ஓடும்பொழுது ரன் அவுட் ஆனது.

எனக்கு ரிங்கு சிங் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. கடைசி பந்து வரை சென்றாலும் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து கொடுத்து விடுவார் என்று நம்பினேன். இந்த வருடம் அவர் அணிக்காக செய்து கொடுக்கும் செயல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. பினிஷிங் ரோலில் எனக்கு கம்பெனி கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். அவர் ஆடும் விதத்தினால் ஆட்டத்தின் மொத்த அழுத்தமும் பந்துவீச்சாளர்களுக்கு சென்று விடுகிறது.

ரிங்கு சிங் கொல்கத்தா அணியுடன் கலந்த சில வருடங்களாகவே பயணித்து வருகிறார். கடின உழைப்பாளி. மைதானத்தில் பயிற்சியில் முழு கவனத்துடன் இருப்பார். அப்படியே மைதானத்திற்கு வெளியே சென்றால், சந்தோசமாக சிரித்து மகிழ்வார். ஆகையால் அதிக நேரங்கள் நான் அவருடன் பழகுவதற்கு நினைப்பேன். நல்ல மனநிலை அவரிடம் கிடைக்கிறது.” என்றார்.