போன வருஷம் குஜராத் எங்கள அடிச்சதுக்கு திருப்பி அடிக்க நான் காத்துகிட்டு இருந்தேன்; இது ரிவென்ச்தான் – ஹெட்மையர்!

0
829
Hetmayer

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் பரபரப்பான போட்டியில் மோதிக்கொண்டன!

கடந்த முறை இரண்டு அணிகளும் மூன்று முறை மோதிக்கொண்டதில் மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றி பெற்று இருந்தது. சிறந்த அணியாக இருந்த போதும் ராஜஸ்தான் அணியால் குஜராத் அணியை கடந்த முறை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் கோப்பையையும் பறி கொடுத்தது!

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி ஆரம்பத்தில் பதுங்கி பின்பு பாய்ந்து 177 ரன்கள் எடுத்தது. இந்த மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்குதான்.

இந்த முறை குஜராத்தை வீழ்த்தி விடலாம் என்று களம் இறங்கிய ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு முகமது சமி தனது உலகத் தரமான சீம் வேகப்பந்து வீச்சு மூலம் கடுமையான அச்சுறுத்தலை தந்தார். அவரை மீறி ராஜஸ்தான் பேட்மேன்களால் ரன் எடுக்க முடியாதது மட்டுமில்லாமல் விக்கட்டுகளையும் பறி கொடுத்தார்கள்.

மிக மோசமான இந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் அதிரடியில் இறங்கி ஆரம்பித்து வைத்தார். அவர் ஆட்டம் இழந்ததும் கொஞ்சம் கூட அதை பொருட்படுத்தாமல் ஹெட்மையர் மிகச் சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் குவித்து அட்டகாசமாக ஆட்டத்தை நிறைவு செய்தார்.

- Advertisement -

முதல் பத்து ஓவர்களுக்கு இந்த போட்டியை ராஜஸ்தான் விளையாடும்போது பார்த்தவர்கள் ராஜஸ்தான் வெல்லும் என்று நினைத்தே இருக்க முடியாது. ஆனால் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஹெட்மயர் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் அணியை வெல்ல வைத்து ரசிகர்களுக்கும் சிறப்பான ஆட்டத்தை தந்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய ஆட்டத்தை முடித்ததால் ஆட்டநாயகன் விருது பெற்ற ஹெட்மயர் பேசுகையில் ” உண்மையில் நான் இவர்களுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். ஏனென்றால் கடந்த சீசனில் எங்களை இவர்கள் தொடர்ந்து வென்றார்கள். அதற்கு இது ஒரு சின்ன ரிவென்ச் ஆக இருக்கிறது. நான் இப்படி விளையாடுவதற்கு உண்மையிலேயே பயிற்சி செய்கிறேன். அதாவது இரண்டு மூன்று விக்கெட்டுகள் விழுந்த பிறகு ஒரு எட்டு ஓவர்களுக்கு 100 ரன்கள் அடிப்பதற்கு பயிற்சி செய்கிறேன். மூளையில் இப்படியான மனநிலையை பதிய வைத்த பிறகு அதை தொடர்வது எளிதாக இருக்கிறது. கடைசி ஓவரில் ஸ்பின்னரை சந்திக்க இருந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க நினைத்தேன் அதற்குப் பிறகு நடப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்!” என்று கூறியிருக்கிறார்!