“இந்த இரண்டு விஷயங்களை அஸ்வின் இடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டும்” – சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆஸ்திரேலிய வீரர்!

0
2449

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்கவாஸ்கர் கோபிக்கான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர கடுமையாக போராடும் . இதன் காரணமாக இந்த டெஸ்ட் பெஸ்ட் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

டெல்லிக்கு வந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆடுகளங்களைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்தப் போட்டிக்கு முன்பாகவும் அதனைப் பற்றிய சில சர்ச்சைகள் ஆங்காங்கே பேசப்பட்டு வருகின்றன . இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர்களை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் .

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் முதல் இன்னிங்சிலும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அஸ்வினை போன்றே பந்து வீசும் ஒருவரை அழைத்து பயிற்சியை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பின் பவுலரான நேத்தன் லியான் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றிய தனது சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் சாதித்திருக்கும் சாதனைகள் என்றும் நிலைத்திருப்பவை . அவரது சாதனைகளே அவருக்காக பேசும் . உண்மையாகவே நான் அவரிடமிருந்து முற்றிலுமாக ஒரு மாறுபட்ட பந்துவீச்சாளர் என குறிப்பிட்டுள்ளார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்தியா வருவதற்கு முன்பு அஸ்வின் பந்து வீசிய வீடியோக்களை பணம் மணி நேரங்களாக பார்த்துக் கொண்டிருந்தேன் . அவரது பந்துவீச்சுகளை பார்ப்பதில் பல மணி நேரங்களை செலவிட்டேன். வீட்டில் அமர்ந்து என்னுடைய லேப்டாப்பில் அவரது வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பதை கவனித்த என் மனைவி என் மீது மிகவும் கோபம் கொண்டார் . என்றும் தெரிவித்தார் .

- Advertisement -

இது பற்றி பேசிய அவர் ” கிரிக்கெட்டில் சிறந்த விஷயம் என்னவென்றால் நாம் தொடர்ந்து புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்கிறோம் . மேலும் நமது எதிரணியிடமிருந்து நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு நம்மை முன்னேற்றுவதற்கு அது ஒரு வாய்ப்பாகவும் அமையும் என தெரிவித்தார்.

மேலும் அஸ்வினுடன் அமர்ந்து பேசும்போது அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்த லியான் அவர் ஆஸ்திரேலியா வந்திருக்கும் போதும் அஸ்வினை சந்தித்து உரையாடியதை பகிர்ந்து கொண்டார் . மேலும் தொடர்ந்து பேசிய அவர் அஸ்வின் இடம் இரண்டு திறமைகள் உள்ளன . அவற்றை நான் எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான் எனக்கு உந்துதலாக அமைந்திருக்கிறது எனக் கூறினார் .

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .