“என்னோட கடைசி கிரிக்கெட் மேட்ச் அந்த தொடர்தானு என் மனைவிகிட்ட சொல்லி இருந்தேன்” – அஷ்வின் மனம் திறந்த உருக்கமான பேட்டி!

0
2097
Ashwin

நடந்து முடிந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 பவுலராக இருக்கும் அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்படாதது தற்போது வரை விவாதமாகியே வருகிறது.

சமீபத்தில் தன்னால் விளையாட முடியாமல் போனது வருத்தம் என்றாலும் அணி வெல்வதற்கு உதவியாக இருக்க வேண்டியது தான் முக்கியம் என்றுஅஸ்வின் பேசியிருந்தால்.

- Advertisement -

தற்பொழுது அவர் இன்னும் மனம் திறந்து தன்னுடைய எதிர்கால கிரிக்கெட் பற்றியும் கடந்த காலத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவங்கள் பற்றியும் பேசி இருக்கிறார்.

இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது
“நான் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் முடித்து திரும்பி வந்த பொழுது அடுத்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரே என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம் என்று என் மனைவியிடம் கூறினேன்.

எனக்கு முழங்கால் பிரச்சனைகள் இருந்தது. என்னுடைய பவுலிங் ஆக்ஷனை மாற்ற போகிறேன் என்று சொன்னேன். ஏனென்றால் நான் பந்து வீசும் பொழுது முன் காலை லேண்டிங் செய்கையில் என் முழங்கால் சிறிதாக வளைந்தது.

- Advertisement -

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முழங்கால் வலிக்க ஆரம்பித்து வீங்கியது. அப்படியானால் இதற்கு என்னதான் செய்வது சென்ற பொழுது நான் என்னுடைய பௌலிங் ஆக்க்ஷனை மாற்ற முடிவு செய்தேன். இது முட்டாள்தனமான அபத்தமான காரியமாக கூட அப்பொழுது இருந்திருக்கலாம்.

ஆனாலும் நான் மீண்டு வந்தும் சொன்னேன். என் முழங்காலில் அதிக அழுத்தம் உண்டாகிறது. இதனால் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நான் 2013-14 ஆம் வருடங்களில் பந்து வீசிய முறைக்கு திரும்ப போகிறேன் என்று சொன்னேன்.

ஆஸ்திரேலியா தொடருக்கு மூன்று நாட்களுக்கு முன்னிருந்து நான் ஊசி போட்டுக் கொண்டுதான் பயிற்சி செய்து விளையாட வந்தேன். முதல் மூன்று நான்கு ஓவர்களை வீசும் பொழுது நான் என்னை ஒரு பந்துவீச்சாளராகவே உணரவில்லை. ஆனால் என்னிடம் இருக்கின்ற விழிப்புணர்வு காரணமாக என்னால் அந்தச் சூழ்நிலையை சமாளிக்க முடிந்தது.

பின்னோக்கி பார்க்கும் பொழுது 36 வயதில் இதைச் செய்ய முடிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய பவுலிங் ஆக்ஷனை மாற்றி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பணயம் வைத்ததை விட பெரிய சவால் எனக்கு இருக்க முடியாது.

அவர்கள் யாராவது இருந்தால் இந்த புதிய முயற்சி செய்த தோல்வி அடைய விரும்பி இருக்க மாட்டார்கள். பழைய முறையிலேயே 15 – 16 விக்கெட்டுகள் எடுத்திருக்கலாம். என்னாலும் பழைய முறையிலேயே தொடர்ந்து நான்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்க முடியும்தான். ஆனால் எனக்கு அது நேர்மையாக இருக்காது!” என்று கூறியிருக்கிறார்!