போன வருஷம் ரெண்டு மேட்ச் விளையாடினேன்; இப்ப நிறைய வாய்ப்பு கிடைக்குது ; இதுதான் எனது பெஸ்ட் டி20 செயல்பாடு அப்படினு நினைக்கிறேன் – ஆட்டநாயகன் பதிரனா!

0
7697
Pathirana

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது!

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தீபக் சகர், துஷார் தேஷ்பாண்டே மற்றும் பதிரனா மூவரும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

இவர்களில் பத்தாவது ஓவருக்கு பின் வந்து இறுதி கட்ட ஓவர்களில் பந்து வீசிய பதிரனா நான்கு ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் உலகத்தில் வெள்ளைப்பந்தில் இலங்கையின் மலிங்கா பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமானதாக இருந்தது. தற்பொழுது அங்கிருந்து வந்திருக்கும் இவரது பந்து வீச்சையும் விளையாடுவது கடினமாக இருக்கிறது.

- Advertisement -

சிறப்பான செயல்பாட்டால் ஆட்டநாயகன் விருது வென்ற பதிரனா பேசும்பொழுது
“சிஎஸ்கே அணி உடனான எனது பயணம் கடந்த ஆண்டு துவங்கியது. கடந்த ஆண்டில் எனக்கு இரண்டு ஆட்டங்களில் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் நான் அதிக போட்டிகளில் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

அணி நிர்வாகம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறார்கள். டி20 கிரிக்கெட்டில் இதுதான் எனது சிறந்த செயல்பாடு என்று நினைக்கிறேன். நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிரமான ரசிகன். எனவே அவரது கோல் கொண்டாட்டத்தை போல நான் எனது விக்கெட் கொண்டாட்டத்தை அமைத்துக் கொண்டேன்!” என்று கூறியிருக்கிறார்!