“நான் விளையாடி ஜெயிக்கவே விரும்பினேன்!” – கேப்டன் ஹர்திக் பாண்டியா வெற்றிக்குப் பிறகு பேச்சு!

0
1015
Hardikpandya

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடர் இன்றுடன் நிறைவடைந்தது . மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .

இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா * நான் இந்த ஆட்டம் முழுவதுமாக நடைபெற்று அதில் எனது அணி வெற்றி பெறவே விரும்பினேன் ஆனால் ரிஜிஸ்டவசமாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சமனில் முடிவடைந்துள்ளது .”. என்று கூறினார்

- Advertisement -

மேலும் அவர்” இந்த ஆட்டத்தின் ஒரு புள்ளியில் தாக்குதல் பாணி ஆட்டம் தான் சிறந்த தற்காப்பாக இருக்கும் என்று உணர்ந்தேன் அதனால்தான் இரண்டு மூன்று விக்கெட்டுகளை நாம் இழந்து இருந்தாலும் தாக்குதல் பாணி ஆட்டத்தை ஆடினேன் ஏதோ ஒரு புள்ளியில் நாம் அதிரடியாக சேர்க்கும் பத்து பதினைந்து உபரி ரன்கள் தான் சில நேரங்களில் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும் ” என்று தெரிவித்தார் .

மேலும் அவரிடம் இந்திய அணி பற்றி கேட்ட பொழுது * இது போன்ற போட்டிகள் அணியில் உள்ள வீரர்களுக்கு ஒரு சோதனையாக அமையும் .. ஆனால் நான் முன்பு கூறியதைப் போலவே மலை குறிப்பிட்டதால் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் துரதிஷ்டவசமானது . காலநிலையை நாம் கட்டுப்படுத்த இயலாது .* என்று கூறினார்

இந்தப் போட்டிக்கு பின் பாண்டியாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அவர் இந்தியா சென்று தனது ஓய்வு நேரத்தை மகனுடன் கழிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் .

- Advertisement -

டி20 போட்டி தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 25ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டிகள் துவங்க இருக்கின்றன. இதற்காக தவான் உள்ளிட்ட ஒரு நாள் போட்டிக்கான அணி வீரர்கள் ஆக்லாந்து வந்தடைந்துள்ளனர் .