“என்னால வெளியே வரமுடியல.. நாங்க என்ன தப்பு செஞ்சோம்னு கேட்டா..!” – மௌனம் கலைத்த ரோகித் சர்மா!

0
585
Rohit

இந்தியாவில் கடந்த மாதத்தில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வெளிப்படுத்தி இருந்தது.

இறுதிப்போட்டி வரை தோல்வியை சந்திக்காத அணியாக இருந்து, கோடிக்கணக்கான அவர்களின் இதயத்தை உடைக்கும் விதமாக இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் கனவை தகர்த்தது.

- Advertisement -

இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எந்த அளவிற்கு பாதித்ததோ, அதைவிட மிக அதிகப்படியாக விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்களை பாதித்திருக்கிறது. இதிலிருந்து நட்சத்திர வீரர்கள் ஆன ரோகித் சர்மா விராட் கோலி இன்னும் முழுமையாக மீளவில்லை.

தற்பொழுது ரோஹித் சர்மா முதல்முறையாக வெளியில் வந்து உலகக் கோப்பை தோல்வி குறித்தும், அதனால் தனக்கு ஏற்பட்ட மன பாதிப்புகள் குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் ரோஹித் சர்மா கூறும் பொழுது “இதிலிருந்து எப்படி மீள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் குடும்பத்தினரும் என் நண்பர்களும் எனக்கு துணையாக தொடர்ந்து வந்தார்கள். என்னை சுற்றி இருந்த விஷயங்களை அவர்கள் எளிமையாக வைத்திருந்து பார்த்துக் கொண்டார்கள். இது கொஞ்சம் பயனுள்ளதாக இருந்தது.

- Advertisement -

ஆனாலும் ஏற்பட்ட தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று. இதைத் தாண்டி வருவது, அதை நகர்த்துவது அவ்வளவு எளிதாக இல்லை. நான் 50 ஓவர் உலகக் கோப்பையை பார்த்து வளர்ந்தவன். எனக்கு அதுதான் மிகப்பெரிய விஷயமும் பரிசும் கூட.

நாங்கள் இதற்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தோம். இறுதியில் நாங்கள் அதை அடைய முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நிச்சயம் இது யாரையும் ஏமாற்றம் அடைய வைக்கும், விரக்தி அடைய வைக்கும்.

எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் எங்களால் முடிந்த அத்தனையையும் செய்தோம். எங்கள் தரப்பில் என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால், நாங்கள் 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றோம். அந்த பத்து ஆட்டங்களிலும் தவறுகள் இருந்தது. தவறுகள் செய்யாத முழுமையான ஆட்டமே கிடையாது. முழுமைக்கு நெருக்கமான ஆட்டத்தைதான் எப்பொழுதும் விளையாட முடியும்!” என்று கூறியிருக்கிறார்!