“நான் சுரேஷ் ரெய்னா ஷாஹித் அப்ரிடி அல்ல” – நிருபரின் கேள்விக்கு குட்டித் தல ரெய்னாவின் அதிரடியான பதில் !

0
380

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குட்டி தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இந்திய மகாராஜா அணிக்காக ஆடி வருகிறார். நேற்று வேர்ல்ட் ஜெயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடின 49 ரன்கள் எடுத்தார்.

போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ரெய்னா அவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ஐபிஎல் தொடர்பான கேள்விகளுக்கு உற்சாகமுடன் பதிலளித்த ரெய்னா இந்த முறை சென்னை திரும்பி இருக்கும் சிஎஸ்கே அணி நிச்சயமாக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியின் போது செய்தியாளர் ஒருவர் சுரேஷ் ரெய்னாவிடம் ” நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள் திரும்ப ஏன் ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் விளையாட கூடாது? என கேள்வி எழுப்பினார். இதற்கு நகைச்சுவையுடன் பதிலளித்த சுரேஷ் ரெய்னா நான் சாஹித் அப்ரிதி இல்லை என பதில் அளித்தார். தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். இனி திரும்ப விளையாட மாட்டேன் என நகைச்சுவையுடன் பதிலளித்தார். சாகித் அப்ரிதி பலமுறை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன் என அறிவித்துவிட்டு பின்னர் மீண்டும் விளையாட வந்ததை அவர் சுட்டிக்காட்டி நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.

மேலும் ஐபிஎல் போட்டிகள் பற்றி தொடர்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா ” ரவீந்திர ஜடேஜா தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து அவர் ஆஸ்திரேலியா அணியுடன் செயல்பட்ட விதம் மிகவும் நன்றாக இருந்தது. ஐபிஎல் போட்டி தொடர்களில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பக்க பலமாக ரவீந்திர ஜடேஜா இருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார் சுரேஷ் ரெய்னா.

தொடர்ந்து பேசிய அவர் ருத்ராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் தற்போது தான் முதல் முறையாக சிஎஸ்கே ஹோம் கிரவுண்டான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கின்றனர். மேலும் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட மிகவும் ஆவலுடன் இருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு இந்த முறை வெற்றி நிச்சயம் என தெரிவித்தார் .

- Advertisement -

இந்திய மகாராஜா அணிக்காக சுரேஷ் ரெய்னா இர்ஃபான் பதான் கௌதம் கம்பீர் ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆடி வருகின்றனர். இந்தப் போட்டி தொடரில் பேட்டிங் பௌலிங் மற்றும் பில்டிங் என ஆல் ரவுண்டராக கலக்கி வருகிறார் சுரேஸ் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது .