“நான் தவானுக்கு ரொம்ப பெரிய ரசிகன்.. எங்க பிரண்ட்ஷிப் பெருசு!” – WC அணியில் புறக்கணிக்கப்பட்ட பின் ரோகித் சர்மா மனம் திறந்த பேட்டி!

0
1334
Rohit

இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இடதுகை வலதுகை காம்பினேஷனை துவக்க இடத்தில் தந்ததில் கங்குலி மற்றும் சச்சின் ஜோடி மிகவும் சிறந்த ஜோடியாக இருக்கிறது!

இவர்களின் காலத்திற்குப் பிறகு இதே முறையில் ஷேவாக் மற்றும் கம்பீர் இருவரும் சிறிது காலம் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு துவக்க இடத்தில் பங்காற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதற்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இடதுகை வலதுகை காம்பினேஷன் கொடுத்த வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருவரும் இருக்கிறார்கள்.

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்க இருக்கும் உலகக் கோப்பை இந்திய அணியில் வெற்றிகரமான ஒரு நாள் கிரிக்கெட் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு இடம் கிடைக்கப்படவில்லை. அவருடைய இடம் வலது கை இளம் வீரர் சுப்மன் கில் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கிறது.

கடந்த வருடத்தில் இந்திய கிரிக்கெட் வட்டாரம் தாண்டி உலக கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா தான் இருப்பார்கள் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

- Advertisement -

ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரர் கில்லை கொண்டு வந்து துவக்க வீரராக களம் இறக்கி தற்போது அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டிருக்கிறது. இதன் காரணமாக ஷிகர் தவான் இல்லாதது பெரிய விமர்சனத்தை உருவாக்காமல் முடிந்துவிட்டது.

ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா கூட்டணி 18 முறை நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 45 சராசரி உடன், 5148 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த நான்காவது கூட்டணியாக இருக்கிறது.

இந்த நிலையில் ஷிகர் தவான் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன். நாங்கள் ஒரு நல்ல பந்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அண்டர் 17 மற்றும் அண்டர் 19 காலங்களில் இருந்து இந்தியாவிற்கு ஒன்றாக மிக நீண்ட காலம் விளையாடி இருக்கிறோம். ஷிகர் தவான் நிதானமான, வேடிக்கையான மிகவும் கூலான மனிதர்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் ரோகித் சர்மா குறித்து ஷிகர் தவான் கூறியிருந்தபொழுது “ரோஹித் சர்மா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். ஐசிசி தொடர்கள் மற்றும் இருதரப்பு தொடர்களில் அவர் நிறைய ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் பெரிய மேடைகளில் நிரூபிக்கப்பட்ட ஒரு வீரர் என்று!” கூறியிருக்கிறார்!