“புகழ்ச்சி வேணும்னு என்னென்ன சொல்றா பாருங்க..” – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் லெஜெண்ட் படத்தின் நாயகிக்கு ரிஷப் பண்ட் பதிலடி!!

0
92

ரிஷப் பண்ட்டை நீண்டநேரம் ஹோட்டலில் பார்க்க வரச்சொல்லி காத்திருக்க வைத்துவிட்டேன் என்று சமீபத்திய நேர்காணலில் லெஜெண்ட் படத்தின் நடிகை கூறியிருந்தார். அதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ரிஷப் பண்ட் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா-வின் சமீபத்திய நேர்காணலுக்கு பிறகு, ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுடேலா இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் பனிப்போர் நிலவி வருகிறது. நேர்காணலில் பேசிய ஊர்வசி ரவுடேலா, நபரின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு, அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த சம்பவம் ஒன்றே பகிர்ந்தார். நேர்காணலில் மிஸ்டர் ஆர்.பி என மறைமுகமாக அந்த நபரின் பெயரை குறிப்பிட்டதை வைத்து பார்க்கையில் அது நிச்சயம் ரிஷப் பன்ட் தான் என ரசிகர்கள் பலர் முடிவுக்கு வந்துவிட்டனர்.

- Advertisement -

அவர் கொடுத்த நேர்காணலில், “நானும் மிஸ்டர் ஆர்.பி இருவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக ஆர்.பி நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்தார். எனக்கு வாரணாசியில் சூட்டிங் இருந்ததால், அதை முடித்துவிட்டு நேரடியாக டெல்லி வந்தேன். டெல்லியில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க நேரிட்டது. இதன் காரணமாக நான் மிகுந்த சோர்வை அடைந்துவிட்டேன். சந்திக்க வருகிறேன் என கூறியதையும் மறந்துவிட்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டேன்.

நிறைய முறை எனக்கு அவர் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். காலையில் எழுந்து தான் பார்த்தேன். 16-17 முறை என்னை அழைத்திருக்கிறார். வேறு ஒருவராக இருந்தால் நிச்சயம் இதை உதாசீனப்படுத்தியிருப்பேன். ஆர்பி மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆகையால் மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் என அவரிடம் தெரிவித்தேன்.” என்றார்.

இந்த நடிகை ரிஷப் பண்ட்டை நீண்ட நேரம் ஹோட்டலில் நீண்டநேரம் காத்திருக்க வைத்தாரா? என சமூக வலைத்தளத்தில் ஊர்வசி ரவுடேலா கொடுத்த நேர்காணலின் வீடியோ பதிவு வைரல் ஆனது. சில வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்திற்கு எப்படி பதில் அளிப்பது என்று தெரியாமல், ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் பண்ட் குறிப்பிட்டதாவது: “புகழ் அடைவதற்காக நேர்காணல்களில் பலர் பொய்களை அள்ளித் தெளிக்கின்றனர். தலைப்புச் செய்தியில் வரவேண்டும் என்பதற்காக என்னென்னமோ கூறுகி வருகின்றனர். பெயர் புகழ் அடைவதற்கு எப்படி சிலர் இவ்வளவு தரக்குறைவாக செல்கிறார்கள் என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்.” என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார்.

- Advertisement -

அதனை அடுத்த பத்து நிமிடத்தில் அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பிடித்துவிட்டனர். இவரது பதிலடியும் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே என்ன உறவு இருக்கிறது என்பது பற்றி பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கின்றன. இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்த புகைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. அதன் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்திருக்கலாம் என்று மற்றொரு தரப்பும் தகவல்களை தெரிவிக்கின்றன.