இந்தியாவில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படக்கூடாது என ஹர்பஜன்சிங் கூறியிருக்கிறார். மேலும் இந்த கருத்து பொதுவாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கொண்டுவரப்பட்ட பிறகு போட்டிகள் அனைத்தும் முடிவு தெரியவதற்காக நடத்தப்படுகின்றன. இந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தங்களுடைய பலமான சுழல் பந்துவீச்சை நம்பி அதற்குத் தகுந்த ஆடுகளங்களை தயார் செய்கின்றன. இதனால் போட்டி இரண்டரை நாட்களிலேயே முடிவுக்கு வந்து விடுகிறது.
அனில் கும்ப்ளே – ஹர்பஜன் சிங் காலம்
இந்திய கிரிக்கெட்டில் 90களில் எடுத்துக்கொண்டால் சுழல் வந்து வீச்சுக்கு இவ்வளவு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படாது. போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில்தான் சுழல் பந்துவீச்சுக்கான சாதகமான நிலைமை தென்பட ஆரம்பிக்கும். இதனால் டெஸ்ட் போட்டியில் ரன்களும் வரும் அதே சமயத்தில் விக்கெட்டுகளும் கிடைக்கும். பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
உதாரணமாக இந்திய அணி 2001 ஆம் ஆண்டு பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை உள்நாட்டில் வைத்து வீழ்த்தியது. அந்த தொடருக்கு அமைக்கப்பட்ட எல்லா ஆடுகளங்களையும் எடுத்துப் பார்த்தால் போட்டிகள் ஐந்தாவது நாளுக்கு செல்லும் அளவுக்கு இருக்கும். அப்படியான ஆடுகளத்தில் தான் ஹர்பஜன்சிங் அதிக விக்கெட் கைப்பற்றி சாதித்தார். இதன் காரணமாக அவர் மறைமுகமாக அஸ்வினை விமர்சனம் செய்வதும் உண்டு.
பேட்ஸ்மேன் நம்பிக்கை ஒழிக்கப்படுகிறது
இது குறித்து ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “நாங்கள் வெற்றி பெற இருப்பினும். ஆனால் அதற்காக பந்து அதிகமாக திரும்பும் ஆடுகளங்களை உருவாக்கினோம். இதன் காரணமாக போட்டி இரண்டரை நாட்களில் முடிந்து விடுகிறத. ஆனால் சரியான அளவில் ஆடுகளங்களை உருவாக்கி இருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். போட்டி நான்காவது அல்லது ஐந்தாவது நாளுக்கு சென்று இருக்கும்.
இதன் காரணமாக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டில் தங்கி விளையாடி இருப்பார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும்.அதே சமயத்தில் இப்படியான ஆடுகளங்களை அமைக்கும் பொழுது, எங்கள் பேட்ஸ்மேன்களின் சுழல் பந்து வீச்சுக்கு எதிரான பலவீனங்கள் பற்றி நாம் பேச மாட்டோம். ஏனென்றால் இப்படியான ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக யாராலும் விளையாட முடியாது.
இதையும் படிங்க : புஜாரா ரகானே இடத்தை.. இந்த 2 பசங்க நிரப்புவாங்க.. ஆச்சரிய தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்
இதை சரி செய்வதற்கு இப்பொழுது ஒரு வாய்ப்பு இருக்கிறது. போட்டி நான்காவது மற்றும் ஐந்தாவது நாளுக்கு செல்லும் வகையில் ஆடுகளங்கள் அமைக்க வேண்டும். இப்படி அமைத்தால்தான் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பார்கள். அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு ஸ்பின் விளையாட மறந்து விட்டது என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.