ஆர்சிபி இல்ல.. ஐபிஎல் 2025ல் ரோகித் இந்த 2 டீம்ல ஒன்னுல தான் ஆடுவார் – ஹர்பஜன் சிங் பேட்டி

0
336

18வது ஐபிஎல் சீசன் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான மெகா ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கின்றது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் மற்றும் ஏலத்தில் வாங்க விரும்பும் வீரர்கள் குறித்து பட்டியல் அமைத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய வீரரான ரோகித் சர்மா எந்த அணியில் விளையாடப் போகிறார் என்ற தகவலை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார்.

- Advertisement -

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தக்கவைப்பு வீரர்களுக்கான பட்டியலை விரைவில் வெளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி வீரரான ரோகித் சர்மா மும்பை அணியிலேயே தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது வேறு அணிக்குச் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

ஏனென்றால் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலக்கப்பட்ட ரோகித் சர்மா இந்த ஆண்டு மெகா ஏலத்தில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் ரோஹித் சர்மாவை பஞ்சாப், ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் வாங்க கடும் போட்டி போடும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ரோகித் சர்மா குறித்த தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஹர்பஜன் கூறும்போது “இந்த வருட ஐபிஎல் ஏலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பது உண்மைதான். இதன் சுவாரசியமான விஷயம் சில பெரிய பெயர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பதுதான். இதில் மேலும் சுவாரசியம் அளிக்க கூடிய விஷயம் ரோகித் சர்மா மும்பையிலேயே தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது டெல்லி அணிக்கு செல்வாரா? என்பது. அனைவரும் பெரிய வீரர்களை வாங்க முயற்சிப்பார்கள்.

மேலும் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து எனக்கு முழுமையாக தெரியவில்லை. 160 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற காலகட்டத்திற்கு மீண்டும் செல்ல விரும்புகிறேன். இம்பாக்ட் பிளேயர் விதி ரன்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவுகிறது. ஆனால் நான் பழைய பள்ளி கிரிக்கெட்டை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:எங்க நாட்டுக்கு இந்திய அணி வரக்கூடாது.. நீங்க பல விஷயங்களை யோசிக்கணும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து

இதன் மூலம் ரோகித் சர்மா மும்பை அல்லது டெல்லி அணிக்கு தான் விளையாடுவார் என்றும், இம்பாக்ட் பிளேயர் விதியை தான் விரும்பவில்லை என்று ஒரு விதமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -