எங்க நாட்டுக்கு இந்திய அணி வரக்கூடாது.. நீங்க பல விஷயங்களை யோசிக்கணும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து

0
176
ICT

அடுத்து 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர வேண்டாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதே சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்படியாவது இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என பெரும் முயற்சிகளை செய்து வருகிறது. இந்திய அணி வந்தால் மட்டுமே பாகிஸ்தானில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருமானரீதியாக வெற்றியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான்

இந்தியா தற்போது பாதுகாப்பு காரணத்தை காட்டி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஏனென்றால் உலகில் வளர்ந்த பெரிய நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு நாடுகளும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு பிரச்சனை பேசாமல் செல்கின்றன.

மிக முக்கியமாக இந்தியாவில் இருந்து கபடி மற்றும் ஹாக்கி போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய அணிகள் பாகிஸ்தானுக்கு செல்கின்றன. அந்த அணிகள் அங்கு பாதுகாப்பான முறையில் தங்கி விளையாடிவிட்டு திரும்பி வருகின்றன. மேலும் ஐசிசி தொடர்கள் இந்தியாவில் நடந்தால் பாகிஸ்தான் அணியும் வருகிறது. எனவே தற்பொழுது இந்திய அணி இதை திட்டவட்டமாக மறுப்பதற்கு சரியான காரணங்கள் இல்லாமல் இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர வேண்டாம்

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறும்பொழுது “பாகிஸ்தான் நிலைமையை பார்க்கும் பொழுது இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர வேண்டாம் என்று சொல்லுவேன். மேலும் பாகிஸ்தானும் இது குறித்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அனேகமாக ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறலாம். இதனால் மீடியாக்களுக்கு நல்ல வாய்ப்பு ஹைப் கிடைக்கும்.

வீரர்களின் பாதுகாப்புக்கு முதல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அடுத்து இரண்டாவதாக வீரர்களின் மரியாதைக்கு இரண்டாவது முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இப்படி இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது. பிசிசிஐ இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை மற்ற உலக கிரிக்கெட் நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். ஆசிய கோப்பை போல ஹைபிரிட் மாடலில்தான் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும்.

இதையும் படிங்க : 60 ரன் ஆவரேஜ்.. ஸ்மித் நீங்க நியாயமா இந்தியாவுக்கு எதிரா.. டெஸ்ட் சீரிஸ்ல இதை செய்யணும் – ஆரோன் பின்ச் விருப்பம்

இந்திய அணி வரும்பொழுதுதான் ஸ்பான்சர் ஷிப் அதிகரிக்கும் நிறைய பணம் வரும். எனவே இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் போராடுகிறது. மேலும் மற்ற அணிகள் இங்கு வந்து விளையாடுகின்றன. ஆனால் அவைகளுக்கும் இந்திய அணிக்கும் வித்தியாசம் உண்டு. பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடுகிறது. இந்தியாவிற்கு பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அங்கே எல்லாம் சமநிலையில் இருக்கிறது. அங்கே அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -