தற்போது ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும், ரகானே தலைமையிலான ரஞ்சி சாம்பியன் மும்பை அணியும் மோதிக் கொள்ளும் இரானி கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல்நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர், ரகானே மற்றும் சப்ராஸ் கான் மூவரும் அரை சதம் அடித்தார்கள்.
சர்பராஸ் கானின் ருத்ர தாண்டவம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் குவித்தது. கேப்டன் ரகானே 97 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்டியன் 64 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் அதிரடியாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். சர்பராஸ் கான் ஆட்டம் இழக்காமல் 221 ரன்கள் எடுத்தார். இன்று மூன்றாவது நாளில் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி கூடுதலாக ஒரு ரன் மட்டுமே எடுத்து 537 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சர்பராஸ் கான் ஆட்டம் இழக்காமல் 222 ரன்கள் குவித்தார். முகேஷ் குமார் 5 விக்கெட் கைப்பற்றினார்.
கேப்டன் ருதுராஜ் ஏமாற்றம் – அபிமன்யு ஈஸ்வரன் அபாரம்
இதைத்தொடர்ந்து ரெஸ்ட் ஆப் இந்தியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த அணிக்கு கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 27 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் 79 பந்தில் 32 ரன், தேவ்தத் படிக்கல் 31 பந்தில் 16 ரன், இஷான் கிஷான் 60 பந்தில் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : ஐபிஎல்-ல் ரோகித்தை இந்த அணி வாங்கி கேப்டன் ஆக்கனும்.. வாய்ப்ப விட்டறாதிங்க – முகமது கைஃப் வேண்டுகோள்
இன்று மூன்றாவது நாள் முடிவில் மிகச் சிறப்பாக விளையாடிய சதம் அடித்த அபிமன்யு ஈஸ்வரன் ஆட்டம் இழக்காமல் 212 பந்தில் 151 ரன், துருவ் ஜுரல் 41 பந்தில் 30 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி மூன்றாம் நாள் ஆட்டநேரம் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருக்கிறது.