இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆங்கில மீடியாக்கள் இந்திய டெஸ்ட் ஆடுகளங்கள் குறித்து தொடர்ந்து பொய்யாக பரப்புவதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவிற்கு டெஸ்ட் விளையாட வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வழக்கமாக இந்திய ஆடுகளங்களை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்திய அணி எந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தாலும் அங்குள்ள ஆடுகளங்கள் குறித்து இதுவரையில் எந்த விமர்சனத்தையும் முன் வைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் சொல்லாமல் செய்த விஷயம்
இந்த முறை பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வேலப்பந்து வீச்சுக்கு சாதகமான சிவப்பு மண் ஆடுகளம் போடப்பட்டிருந்தது. மேலும் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை முதல் நாளில் காணப்பட்டது. இதனால் முதல் 144 ரன்னில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது.
இதற்கு அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா இணைந்து விளையாடி அன்றைய நாளில் விக்கெட் ஏதும் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் அன்றைய நாளிலேயே சதமும் அடித்து அசத்தினார். இந்த ஜோடி மொத்தம் 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதே சமயத்தில் இரண்டாவது நாளில் பங்களாதேஷ் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மொத்தமாக அன்றைய நாளில் 17 விக்கெட் விழுந்தது.
ஆங்கில மீடியாக்களுக்கு பதிலடி
இந்த நிலையில் இரண்டாவது நாளில் 17 விக்கெட் விழுந்ததை வைத்து இந்திய டெஸ்ட் ஆடுகளத்தை ஆங்கில மீடியாக்களால் குறை சொல்ல முடியவில்லை. காரணம் முதல் நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனி ஒரு வீரராக அபாரமாக விளையாடி சதம் அடித்திருந்தார். எனவே அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய முடியும் என அவர் நிரூபித்து இருந்தார்.
இதையும் படிங்க :ரோகித்துக்கு இதை காட்டுங்கப்பா.. ஜடேஜா பத்தி தெரியாம அதுல தப்பு பண்றாரு – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது “ரவிச்சந்திரன் அஸ்வின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் அப்ளை செய்து விளையாடினால் இந்த ஆடுகளத்தில் சதம் அடிக்க முடியும் என சென்னையில் கூறினார். இந்திய டெஸ்ட் ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய முடியாது என அழுகைகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் அவர் இதை நடத்திக் காட்டினார். ஆங்கில மீடியாக்கள் வழக்கமாக ஆடுகளங்கள் பற்றி புலம்புவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.