இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய 38 வயதான ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பெரிய அளவில் காலம் கடத்தாமல் அவர் முன்கூட்டியே அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா இருவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் துரதிஷ்டமான வீரர்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஷிகர் தவான் முற்றாக ஓரம் கட்டப்பட்ட பொழுது அவருடைய ரன் சராசரி 41 ஆக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தது. அந்த சமயத்தில் உலக கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரர்களில் 40க்கும் மேற்பட்ட ரன் சராசரி வைத்திருந்தது ஷிகர் தவானுக்கு அடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் டீன் எல்கர் மட்டும்தான்.
மேலும் இளம் வீரர் சுப்மன் கில்லை ஷிகர் தவான் தலைமையில் இந்திய ஒருநாள் அணியில் கொண்டு வந்து, பிறகு ஷிகர் தவானை வெளியேற்றி சுப்மன் கில்லை நிரந்தர வீரராக மாற்றினார்கள். இப்படி இந்திய கிரிக்கெட்டில் மாற்றத்திற்கு தேவை ஏற்பட்ட போதெல்லாம் முதலில் புறக்கணிக்கப்பட்ட வீரராக ஷிகர் தவான் இருக்கிறார்.
கவுதம் கம்பீர் – ஹர்திக் பாண்டியா வாழ்த்து
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஷிகர் தவானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுது “அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஷிகி. எதிர்காலத்தில்உங்கள் வாழ்க்கைக்கு எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் இதே மகிழ்ச்சியை நீங்கள் பரப்புவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று வாழ்த்தியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஆண்டர்சனே வியந்த ஆசிப்பின் அரிய பவுலிங் வித்தை.. இலங்கை அசிதாவுக்கும் இருக்கு – பாக் ஆகிப் ஜாவேத் பேட்டி
மேலும் ஷிகர் தவானுக்கு ஹர்திக் பாண்டியா கூறிய வாழ்த்துச் செய்தியில் “இது உங்களுக்கு மட்டுமே சிறந்ததாக இருக்கக்கூடியது ஷிகி பா! உங்களுடைய அற்புதமான வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார். மேலும் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் ஷிகர் தவான் ஓய்வுக்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.