2 1/2 நாளில் கேப்டன் ரோகித் சர்மா டிக்ளர் செய்தது சரியா?.. 3 முக்கிய காரணங்கள்.. முழு அலசல்

0
248
Rohit

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸை இரண்டரை நாட்களில் கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளர் செய்தது சரியா என்கின்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.

இந்த போட்டியில் நாளை முழுதாக இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில்,குறைந்தபட்சம் இந்திய அணி தேநீர் இடைவேளை வரையிலாவது விளையாடி இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி செய்யவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கம்பீர் வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் தந்த முன்னேற்றம்

இன்று மூன்றாவது நாளில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அருமையான முறையில் அதிரடியாக விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய இந்த இருவருமேசதம் அடித்தார்கள். இதில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்தார். அதே சமயத்தில் சுப்மன் கில் 119 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த பொழுது, பங்களாதேஷ் அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தார். சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் இவ்வளவு பெரிய இலக்கை இதுவரையில் எந்த அணியும் துரத்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் சர்மா எடுத்த முடிவு சரியா?

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி ஒரு மணி நேரம் மட்டுமே பந்து வீச வேண்டியது இருக்கும். பிறகு தேநீர் இடைவேளையில் 20 நிமிடங்கள் கிடைக்கும். தங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதல் ஸ்பெல் வீசிய பிறகு இந்த 20 நிமிடத்தை பயன்படுத்திக் கொள்ள இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

இதையும் படிங்க : 515 ரன்.. ரிஷப் பண்ட் கில் அபார சதங்கள்.. பங்களாதேஷ் அணி உலக சாதனை படைக்குமா?.. இந்திய அணி டிக்ளர்

அடுத்து இரண்டாவதாக இவ்வளவு பெரிய இலக்கை எந்த அணியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் துரத்தியது கிடையாது. மேலும் ஆடுகளம் மெதுவாக மாறிவிட்ட காரணத்தினால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ரண்களை எடுக்க முடியாது என்பதால், சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து போட்டியை சீக்கிரத்தில் முடிக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பி இருக்கிறது. ஆனாலும் இன்றைய நாளின் கடைசி 20 ஓவர்கள் இருக்கும்போது டிக்ளர் செய்திருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -