இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 515 ரன்கள் மெகா இலக்கை வைத்து இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்திருக்கிறது.
தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று இன்னிங்ஸ்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
விழுந்து எழுந்த இந்திய அணி
இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்து வீச முடிவு செய்ய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்தது. 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்த பொழுது, ரவிச்சந்திரன் அஸ்வின் 113 மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் எடுத்து இந்திய அணியை காப்பாற்றினார்கள். ஹசன் மக்மத் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி 149 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 227 ரன்கள் பின் தங்கியது. பங்களாதேஷ் அணிக்கு ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். இந்திய அணிக்கு ஜஸ்ட்பிரித் பும்ரா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
அதிரடி சதம் விளாசிய ரிஷப் பண்ட் மற்றும் கில்
நேற்று மூன்றாவது நாளில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாவது நாளில் இந்திய அணிக்கு தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாட இருவருமே சதம் அடித்தார்கள்.
ரிஷப் பண்ட் 128 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து கேஎல்.ராகுல் ஆட்டம் இழக்காமல் 17* ரன்கள், சுக்குமன் கில் 176 பந்துகளில் 119* ரன்கள் எடுத்து, இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.
இதையும் படிங்க :
இந்திய ஒட்டுமொத்தமாக 514 முன்னிலை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து பங்களாதேஷனுக்கு நான்காவது இன்னிங்ஸில் இலக்காக 515 ரன்களை இந்திய அணி நிர்ணயித்திருக்கிறது. இதை பங்களாதேஷ் அணி துரத்தினால் உலக சாதனையாக அமையும். ஆனால் சேப்பாக்கத்தில் அதற்கான வாய்ப்புகள் 99 சதவீதம் கிடையாது!