உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்திய அணியில் நுழைந்த ருதுராஜ் உட்பட யாரும் எதிர்பார்க்காத நான்கு வீரர்கள்!

0
11016
ICT

உலக கிரிக்கெட்டில் தற்பொழுது எல்லா அட்டவணைகளும் முடக்கி வைக்கப்பட்டு, ஏறக்குறைய எல்லா முக்கிய அணிகளின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள்!

நடப்பு ஐபிஎல் சீசன் இந்த மாதம் 28ஆம் தேதி முடிவடைகிறது. இதற்குப் பிறகு அடுத்தடுத்து உலக கிரிக்கெட்டில் முக்கியமான தொடர்கள் ஆரம்பிக்கின்றன!

- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் ஏழாம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது!

இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் சேர்க்கப்பட்டிருந்தார்!

எதிர்பாராத விதமாக ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்ததோடு ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகினார்.

- Advertisement -

இந்த நிலையில் இவரது இடத்தில் தற்பொழுது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மூத்த விக்கட் கீப்பர் விருதிமான் சகா சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பலரது எதிர்பார்ப்புக்கு மாறாக மும்பை அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் இடது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

கேஎல் ராகுல் துவக்க ஆட்டக்காரராகவும் வருவார் அதே வேளையில் விக்கெட் கீப்பராகவும் இருப்பார் என்பதால், அவரைப் போலவே இரண்டு இடங்களுக்கும் விளையாடக்கூடிய இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்!

மேலும் இந்தத் தொடருக்கு ஸ்டேன்ட் பை வீரராக ருத்ராஜ், சூரியகுமார் யாதவ், வேத பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!