இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி போன்ற பெரிய பேட்ஸ்மேன்கள் சிறிய அணியுடன் கவனத்தை இழந்து விடுவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.
அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்கிறார். எனவே பசித் அலியின் பேச்சு மறைமுகமாக பாபர் அசாமை தாக்குவதாக இருப்பது போல தெரிகிறது.
ஏமாற்றம் தந்த விராட் கோலி
விராட் கோலி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் 10 ரன்னை தாண்டவில்லை. இதே போல இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்னை தாண்டவில்லை. நடப்பு டெஸ்ட் சீசனை விராட் கோலி மிகச் சிறப்பாக ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அதே சமயத்தில் விராட் கோலி களத்திற்கு உள்ளே வந்து விளையாடிய விதத்தில் அருமையான பேட்டிங் டச்சில் தெரிந்தார். எந்த வித தடுமாற்றத்தையும் அவரிடம் பார்க்க முடியவில்லை. ஆனால் விக்கெட்டை மட்டும் மிக எளிதாக கொடுக்கிறார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டில் பந்து பட்டதே தெரியாமல் ரிவ்யூ செய்யாமல் பரிதாபமாக வெளியேறினார்.
பெரிய வீரர்கள் பெரிய அணிகளுக்கு எதிராக வருவார்கள்
விராட் கோலி குறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிச்சயம் திரும்பி வருவார். ஏனென்றால் விராட் கோலிக்கு ஆஸ்திரேலியா போன்ற வேகமான ஆடுகளங்கள் சரியாக இருக்கும். பெரும்பாலும் பெரிய வீரர்கள் சிறிய அணிகளுக்கு எதிராக கவனத்தை இழக்கிறார்கள். அதே சமயத்தில் பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பான முறையில் அவர்கள் திரும்பி வருகிறார்கள்”
இதையும் படிங்க : இந்திய டீம் பவுலிங்.. மாறி மாறி நடந்ததுக்கு இவ்வளவு மார்க் கொடுப்பேன் – ஜாகீர் கான் மதிப்பீடு
“இந்தியா உள்நாட்டில் வெற்றி பெறுகிறது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இந்தியா ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலியா அணியை இரண்டு முறை டெஸ்ட் தொடரில் வென்று இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியை வெல்ல இந்திய அணி அனுமதிக்காது” என்று கூறியிருக்கிறார்.