இந்திய டீம் பவுலிங்.. மாறி மாறி நடந்ததுக்கு இவ்வளவு மார்க் கொடுப்பேன் – ஜாகீர் கான் மதிப்பீடு

0
70
Zaheer

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தன்னுடைய மதிப்பெண்ணை கொடுத்து இருக்கிறார்.

சென்னை ஆடுகளம் முதல் நாளில் வேகப் பந்துவீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. அதே நாளின் மத்தியில் பேட்டிங் செய்ய சாதகமாக மாறியது. இரண்டாவது நாளில் மீண்டும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. பிறகு நான்காவது நாளில் வழக்கம் போல் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக வந்தது. ஆடுகளம் பல சவால்களைக் கொண்டு சிறப்பான கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது.

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா மேஜிக்

முதல் நாளில் ஆரம்பத்தில் வேகப் பந்துவீச்சுக்கு மிக அதிகபட்சமான சாதகங்கள் இருந்ததை பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் முடிந்த வரையில் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் முதல் நாளின் நடுவில் அவர்களால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது நாளில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை அதிரடியாக கைப்பற்றினார். அதே சமயத்தில் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள். இவர்களுடன் உள்ளே வந்த ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜாவும் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். பிறகு சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் வர வழக்கம்போல் அஸ்வின் ஆறு விக்கெட் மற்றும் ஜடேஜா மூன்று விக்கெட் கைப்பற்றி போட்டியை முடித்தார்கள்.

- Advertisement -

ஜாகீர் கான் கொடுத்த மதிப்பெண்கள்

இந்த நிலையில் இந்திய பந்துவீச்சு குறித்து பேசிய ஜாகீர் கான் கூறும் பொழுது ” ஒட்டுமொத்த பந்துவீச்சு செயல் திறனை இந்தியாவின் பக்கம் பார்த்தால் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. முதல் நாளில் பந்துவீச்சுக்கு இருந்த சாதகத்தை டாஸ் வென்றதின் மூலமாக பங்களாதேஷ் நன்றாக பயன்படுத்தியது. அதே சாதகம் இந்திய அணி பந்து வீசும் போது இல்லை. இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது”

இதையும் படிங்க : நியூசியை வீழ்த்திய இலங்கை அணி.. மாறிய WTC புள்ளி பட்டியல்.. இந்திய அணிக்கு புதிய போட்டி அணி

“நீங்கள் முதல் இன்னிங்சில் நல்ல ஸ்கோர் பெற்றிருந்தால் பந்துவீச்சில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த வேண்டும். இதை மிகச் சரியாக பும்ரா, சிராஜ், ஆகாஷ் மூவரும் செய்தார்கள். மேலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமை வந்த பொழுது சிறப்பாக செயல்பட்டு அஸ்வின் மற்றும் ஜடேஜா போட்டியை முடித்து விட்டார்கள். இந்திய பந்து வீச்சு தாக்குதலுக்கான மதிப்பண்களை கொடுக்க வேண்டும் என்றால் முழு மதிப்பெண்களான 10 மதிப்பெண்களையும் கொடுக்கலாம்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -