தோனி கிரிக்கெட் சட்டத்தைவிட பெரிய ஆளு.. அவர் செஞ்சதை ஏத்துக்கவே முடியாது – அம்பயர் டேர்ல் ஹார்பர் குற்றச்சாட்டு

0
179
Dhoni

உலக கிரிக்கெட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய நடுவராக பெயர் எடுத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேர்ல் ஹார்பர் மகேந்திர சிங் தோனி குறித்து ஐபிஎல் தொடரை வைத்து விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி உலக கிரிக்கெட்டில் முக்கியமான வீரர் மற்றும் மிகவும் பெயர் பெற்ற கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஐபிஎல் தொடரில் அவர் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் இன்று வரை விவாதத்திற்குரியதாகவே இருந்து வருகின்றன.

- Advertisement -

டேர்ல் ஹார்பரின் சர்ச்சை ஆன முடிவுகள்

உலகப் புகழ் பெற்ற சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்தை எறிவதாக கூறி ஆஸ்திரேலியா வீரர்கள் ஒரு போட்டியில் இவரிடம் முறையிட, இவர் முத்தையா முரளிதரன் மேற்கொண்டு பந்தை வீசக்கூடாது என தடுத்தார். அந்த நேரத்தில் இலங்கை கேப்டன் அர்ஜுன ரனதுங்கா ஒட்டு மொத்த இலங்கை அணியும் விளையாடாது என்று வெளியேறினார்.

இதே போல மெக்ராத் பந்து வீச்சில் சச்சினுக்கு சர்ச்சைக்குரிய முறையில் எல்பிடபிள்யு கொடுத்து பெரிய விவாதத்தை கிளப்பியவர். இவர் கிரிக்கெட் நடுவர் போல தெரிய மாட்டார். ஆஸ்திரேலியா வீரர்கள் களத்தில் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் இவர் களத்திற்கு வெளியில் பல விஷயங்கள் குறித்து பேசி பிரச்சனைகளை உண்டாக்குவார். இந்த முறை மகேந்திர சிங் தோனி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தோனி செய்தது பெரிய ஏமாற்றம்

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் தகுதி சுற்றுப்போட்டியில் குஜராத் அணிக்கு அணிக்கு எதிராக 16வது ஓவரை பதிரனா வீச முடியாது என நடுவர்கள் தடுத்தார்கள். ஏனென்றால் அவர் களத்திற்கு வெளியே 9 நிமிடங்கள் செலவழித்து இருந்தார். எனவே அந்த நிமிடம் களத்தில் தாண்டிய பிறகுதான் அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். இதற்காக தோனி களத்தில் வேண்டும் என்று நேரத்தை வீணாக்கி பதிரணாவை அந்த 16வது ஓவரை வீச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசி இருக்கும் டேல் ஹார்பர் கூறும் பொழுது ” தோனி அந்த குறிப்பிட்ட போட்டியில் தன்னுடைய விருப்பமான பந்துவீச்சாளரை 16வது ஓவரை பந்து வீச வைப்பதற்காக வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அந்த ஏமாற்றமான நிகழ்வில் இருந்து நான் எடுக்கக்கூடிய முடிவு இதுவாகத்தான் இருக்க முடியும்.

இதையும் படிங்க : ஆஸி ஜெயிக்கணும்னா.. இவர் குறிப்பா அந்த இடத்துல நல்லா பெர்ஃபார்ம் பண்ணியே ஆகணும் – ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

தோனியின் செய்கை கிரிக்கெட் ஸ்பிரிட்டுக்கும் நடுவர்களின் வழிகாட்டுதலுக்கும் எதிராக இருந்தது என்பதுதான் எனக்கு பிரச்சனை. அந்த நேரத்தில் கேப்டனுக்கு பந்து வீச வேறு பவுலர்கள் இருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. ஒருவேளை தோனி போல சிலர் கிரிக்கெட் சட்டங்களை விட பெரியவர்களாக இருக்கலாம். கிரிக்கெட்டின் உற்சாகம் மற்றும் வெற்றிக்காக சிலர் எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்பது ஏமாற்றமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -