தற்போது நடைபெற்று வரும் இரானி கோப்பையில் இரட்டை சதம் அடிப்பேன் என வீட்டில் இருப்பவர்களிடமும் சக அணி வீரர்களிடமும் ஏற்கனவே கூறி இருந்ததாக சர்பராஸ் கான் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசம் ஏகனா மைதானத்தில் தற்பொழுது ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் ரஞ்சி சாம்பியன் மும்பை மாநில அணிக்கும் இடையே இரானி கோப்பை டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
சர்பராஸ் கானுக்கு கடினமான வாரத்தில் இரட்டை சதம்
இந்த வாரத்தில் இரானி கோப்பை தொடரில் விளையாடுவதற்காக உத்தரப்பிரதேசம் வந்த சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவருக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இன்னும் சில மாதங்களுக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இப்படியான நிலையில் அண்ணன் சர்ப்ராஸ் கான் இந்திய அணியில் இருந்து வெளியில் வந்து இரானி கோப்பை தொடரில் மும்பை மாநில அணிக்காக விளையாடி 286 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 222 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். மேலும் இவரது ஆட்டத்தால் மும்பை அணி இரானி கோப்பையை வெல்லும் வாய்ப்பிலும் இருக்கிறது.
சொல்லி அடித்த சர்பராஸ் கான்
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சர்பராஸ் கான் கூறும்பொழுது “ஆமாம் எனக்கு இது மிகவும் ஒரு உணர்ச்சிகரமான வாரமாக இருந்திருக்கிறது. விபத்தில் சிக்கி இரானி கோப்பையில் விளையாட முடியாமல் போன என் தம்பி முஷீர் கானுக்காக நான் செட்டில் ஆகிவிட்டால் இரட்டை சதம் அடிப்பேன் என எனது குடும்பத்தாரிடமும் எனது சக அணி வீரர்களிடமும் உறுதியளித்து இருந்தேன்”
“என் தம்பியும் இந்தத் தொடரில் விளையாடு இருந்தால் என் அப்பா மிகவும் பெருமைப்பட்டு இருப்பார். துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கினார். எனவே இந்த போட்டியில் அவருக்காக எப்படியாவது நான் இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன்”
இதையும் படிங்க : அடுத்த பும்ரா கில் ஜெய்ஸ்வால் மாதிரி.. பிளேயர்ஸ் வரதுக்கு இந்த ஏற்பாடு செய்றேன் – ரோஹித் சர்மா பேட்டி
“நீண்ட நாட்களுக்குப் பிறகு இரானி கோப்பையை வெல்ல எங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு. இதற்காக தனிப்பட்ட முறையில் நல்ல ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோரை போர்டில் போட வேண்டும் என்று மனதில் நினைத்தேன். தற்பொழுது அதை செய்ய முடிந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.