பாகிஸ்தான் டீம் வரவை விட செலவு அதிகம்.. தார் ரோடு பிட்ச்.. 12 புள்ளியும் போச்சு – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
103
Aakash

பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் 448 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்தும் தோல்வி அடைந்தது அந்த நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பெரிய விமர்சனங்களை அந்த அணியும் அணி நிர்வாகமும் சந்தித்து வருகிறது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்ற முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தோல்வி இதுவாகும். அத்தோடு நீண்ட வருடங்கள் கழித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டி ஒன்றில் தோல்வியடைந்து இருக்கிறது. ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் கூட இல்லாமல் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றதும் விமர்சனம் ஆகி வருகிறது.

- Advertisement -

வரவைவிட செலவு அதிகம்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “பாகிஸ்தானுக்கு எதிராகப் பங்களாதேஷ் அணியின் முதல் சர்வதேச டெஸ்ட் வெற்றியாகும். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அதுவும் உள்நாட்டில் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் இது பாகிஸ்தான் அணி கொடுத்த ஒரு பரிசு. நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் சென்றது தவறு ஆகிவிட்டது.

“பின்னர் உங்களால் நன்றாக பேட்டிங் செய்ய முடியவில்லை. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களிடம் இரண்டாவது இன்னிங்சில் சரணடைந்து விட்டீர்கள். உங்களுடைய ஓவர் ரேட் மிகவும் குறைவாக இருந்தது. நான்கு வேக்ப் பந்துவீச்சாளர்களுடன் சென்றால் ஓவர் ரேட் குறைவாக இருக்கும். இதனால் பாகிஸ்தான் அணியின் 12 புள்ளிகளை ஐசிசி குறைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணி வரவை விட செலவு அதிகமாக செய்கிறது”

- Advertisement -

சாலை போன்ற ஆடுகளம்

தொடர்ந்து பேசிய ஆகாஷ் சோப்ரா “பாகிஸ்தான் அணி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அவர்கள் தங்களது சொந்த நாட்டில் விளையாடும் பொழுது நல்ல அணி. ஆனால் பெயரால் அறியப்படுகிறார்கள், ஆனால் செயல்களால் அறியப்பட வேண்டும். அவர்கள் சொந்த நாட்டில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்று காலம் ஆகிவிட்டது. அவர்கள் சாலை போன்ற ஒரு ஆடுகளத்தை உருவாக்குகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் பாய் கிடையாது.. இந்திய அணியில் எல்லோருக்கும் பிடித்த பேட்ஸ்மேன் இவர்தான் – ரிங்கு சிங் பேட்டி

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்பொழுது புயல் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக தோற்பது அவர்களுக்கு மிகப்பெரிய கௌரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் வீரர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -