விராட் பாய் கிடையாது.. இந்திய அணியில் எல்லோருக்கும் பிடித்த பேட்ஸ்மேன் இவர்தான் – ரிங்கு சிங் பேட்டி

0
72
Rinku

இந்திய அணியில் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்து மிகச்சிறந்த ஃபினிஷர் ஆக வரக்கூடிய எல்லா திறமைகளும் கொண்ட பேட்ஸ்மேனாக இளம் வீரர் ரிங்கு சிங் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு வெளிப்படையாகப் பதில் அளித்து இருக்கிறார்.

மேலும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் கட்டாயம் கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இது இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகுந்த ஏமாற்றக் கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக அமைந்திருந்தது. இப்படி முக்கியமான எல்லா விஷயங்கள் குறித்த கேள்விக்கும் பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

வாழ்க்கையை மாற்றிய ஐந்து சிக்ஸ்

2023 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக யார் தயார் பந்துவீச்சின் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் விலாசி அணியை வெற்றி பெற வைத்ததில் இருந்து இவரது வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. இதைத் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற இவர் உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார்.

இதுகுறித்து பேசிய ரிங்கு சிங் கூறும் பொழுது ” எனக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத பொழுது நேராக என்னிடம் வந்த ரோகித் சர்மா ‘பரவாயில்லை நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு ஒரு உலகக் கோப்பை வருகிறது. நீங்கள் நிறைய உலகக் கோப்பையில் விளையாடுவீர்கள். நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்துக் கொண்டே இருங்கள்” என்று கூறி எனக்கு புரிய வைத்தார்.

- Advertisement -

பிடித்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் இவர்தான்

தனக்கு பிடித்த கேப்டன் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் யார் என்று ரிங்கு சிங் கூறும் பொழுது ” எனக்கு கேப்டன் ஆக்கர் ரோஹித் சர்மாவை மிகவும் பிடிக்கும். அவர் எப்பொழுதும் மிகவும் சில் ஆக இருக்கக்கூடியவர். அதே சமயத்தில் கேப்டனாக அணியை ஆக்ரோஷமாக வழி நடத்துவதும் முக்கியம். எனவே எனக்கு விராட் கோலியின் ஆக்ரோஷம் பிடிக்கும்.

இதையும் படிங்க : 8 ஃபோர்ஸ் 6 சிக்ஸ்.. தனியாளாக கலக்கிய சிஎஸ்கே சமீர் ரிஸ்வி.. புவி அணி தோல்வி.. உபி டி20 2024

மேலும் பிடித்த பேட்ஸ்மேன் என்றால் ரெய்னாவை அதிகம் பிடிக்கும். அடுத்து பொதுவாகவே ரோஹித் சர்மா அவர்களின் பேட்டிங் எல்லோருக்குமே பிடிக்கும். காரணம் அவருடைய பேட்டிங்கில் அதிக டைமிங் இருக்கும். இதேபோல் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் வித்தியாசமானவர்கள். இதில் சூரியகுமார் யாதவ் விளையாடும் ஷாட்கள் மற்றவர்களால் விளையாடவே முடியாது. மேலும் எனக்கு மிகவும் பிடித்த பவுலர் பும்ராதான். மறக்க முடியாத நிகழ்வு என்றால் என் வாழ்க்கையை மாற்றிய நான் அடித்த அந்த ஐந்து சிக்ஸர்கள் நிகழ்வுதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -