இந்தியாவில் தற்போது வினோத் மான்கட் டிராபி அண்டர் 19 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 19 வயது உட்பட்டோருக்கான இளம் வீரர்கள் தங்களது திறமையை இந்த தொடரின் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக் தனது அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான வினோத் மான்கட் ட்ராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற டெல்லி மற்றும் மணிப்பூர் அணிகளுக்கு இடையேயான ஒரு லீக் போட்டியில் மணிப்பூர் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய மிடில் வரிசை பேட்ஸ்மேன் அலிகரீம் 119 பந்துகளை எதிர் கொண்டு ஐந்து பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு இறுதிக்கட்ட பேட்ஸ்மேன் அக்கீல் அகமத் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 45 ரன்கள் குவித்தார். டெல்லி அணி தரப்பில் பந்துவீச்சில் லக்ஷ்மன் மூன்று விக்கெட்டுகளும், திவான் ராபத் மற்றும் அமன் சவுத்ரி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது.
இதில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷர்த்தக் ரேய் மற்றும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஆனா வீரேந்திர சேவாக்கின் மகன் ஆரியவிர் ஷேவாக் ஆகியோர் களம் இறங்கினார்கள். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய ஆரியவிர் ஷேவக் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 64 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 49 ரன்கள் குவித்தார்.
அரை சதம் அடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேனிஷ் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பிறகு நான்காவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் பிரணவ் பண்டின் சிறப்பான ஆட்டத்தால் 26 ஓவர்களில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் பிரணவ் பாண்ட் 45 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். 16 வயதான ஆரியவிர் சேவாக் இதற்கு முன்பு நடைபெற்ற டிசிசிஏ சோதனை போட்டியில் 136 பந்துகளில் 183 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க : ஓபனா சொல்றேன் எங்க கிட்ட பிளானே இல்ல.. முக்கியமான அதையே செய்யாம எப்படி ஜெயிக்க? – நஜ்புல் சாந்தோ வருத்தம்
2022ஆம் ஆண்டு விஜய் மெர்ச்சன்ட் டிராபிக்கான 11 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் நிலையில் தனது தந்தையை போலவே இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.