நான் சொல்றத ரிஷப் பண்ட் யோசிச்சா.. அவரோட மோசமான நிலை என்னனு நல்லா புரியும் – சஞ்சய் பாங்கர் பேட்டி

0
21

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக மோசமான பார்மில் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராபின் முத்தப்பா மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்கள்.

- Advertisement -

மோசமான ஃபார்மில் ரிஷப் பண்ட்

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை வாங்கியது. அவரையே கேப்டனாக நியமித்த நிலையில் அவரது கேப்டன்ஷிப் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேன் ஆக அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை 128 பந்துகள் விளையாடி 127 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கும் ரிஷப் பண்ட், ஒரு பேட்ஸ்மேன் ஆக தனது பேட்டிங்கை மறந்து விட்டார் என இந்திய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து சஞ்சய் பாங்கர் பேசும்போது “அவர் இன்னும் வெள்ளைப் பந்து ஆட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் இரண்டு வடிவங்கள் உள்ளன. ரிஷப் பண்ட் ஒரு மிகச் சிறந்த டெஸ்ட் பேட்டர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த குறிப்பிட்ட சீசனில் நான் அவரிடம் கவனித்த விஷயம் என்னவென்றால் நிறைய முறை அவர் விக்கெட்டுக்கு பின்னால் இருந்து விளையாட முயற்சித்து அவுட் ஆகிறார்.

- Advertisement -

தனது நிலையை மறந்து விட்டார்

இப்போது ரிஷப் பண்ட் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்கள் வெளியே எடுத்துப் பார்த்தால், அவர் ரன்கள் எப்படி எடுக்கிறார் என்று பார்க்க வேண்டும். கவர் டிரைவ் மூலமாகவும், விக்கெட்டில் இரண்டு அடி முன்னோக்கி எடுத்து வைத்து பக்கவாட்டு ஸ்கிரீன் திசையை நோக்கியும், மிட் விக்கெட் மற்றும் ஸ்கொயர் திசையிலும் அடிக்க முயற்சித்து விளையாடுகிறார். ஆனால் இந்த சீசனில் ஒரு பேட்ஸ்மேன் ஆக அவர் குழப்பத்தில் சிக்கி அவர் அந்த ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது வேறு விதமான ஷாட்கள் விளையாட முயற்சித்து அவுட் ஆகிறார் என்று பேசியிருக்கிறார். தனது பேட்டிங்கை மறந்து குழப்பத்தில் அவுட் ஆகி விடுகிறார்” என பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:மீண்டும் கேப்டன் பதவி வேணும்.. கோரிக்கை வைத்த விராட்.. நிராகரித்த பிசிசிஐ.. இதுதான் ஓய்வு முடிவுக்கு காரணமா.? வெளியான தகவல்

இதுகுறித்து உத்தப்பா கூறும் போது “ரிஷப் பண்ட் இப்போது ஒரு அணியின் பேட்ஸ்மேன் ஆக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் மூழ்கி விட்டார். அவரிடையே தீவிரமான தெளிவின்மை இருக்கிறது. தனது பேட்டிங் நிலையை மறந்து அப்துல் சமாத்தை மேலே அனுப்ப முயற்சித்த போதே அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பது தெரிகிறது. எனவே அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆக என் தனது நிலை என்ன என்பதை அறிந்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -