மீண்டும் கேப்டன் பதவி வேணும்.. கோரிக்கை வைத்த விராட்.. நிராகரித்த பிசிசிஐ.. இதுதான் ஓய்வு முடிவுக்கு காரணமா.? வெளியான தகவல்

0
264

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக வெளியான தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் அவர் மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவியை விரும்பியதாகவும் ஆனால் பிசிசிஐ அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் புதிய தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

விராட் கோலியின் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தினார். ஏற்கனவே இந்த இரண்டு தொடர்களிலும் கேப்டன் ரோகித் சர்மா மோசமாக விளையாடியதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து விராட் கோலி தற்போது ஓய்வு பெற விரும்புவதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் தேவை இந்திய அணிக்கு மிகவும் அவசியம் எனவும் அவரது முடிவை பரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் விராட் கோலியிடம் பேசியதாக செய்திகள் வெளியானது. இந்த சூழ்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு தகவலின் படி, விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவியை விரும்பியதாகவும் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக ஆங்கில பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியாவில் இது குறித்து வெளிவந்துள்ளது.

- Advertisement -

மறுப்பு தெரிவித்த பிசிசிஐ

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தகவலின்படி, விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவியை விரும்பியதாகவும் ஆனால் அதற்கு பிசிசிஐ ஒரு இளம் தலைவரை எதிர்பார்ப்பதாகவும்,அவர் கௌதம் கம்பீர் உடன் நீண்ட காலம் பணியாற்றும் வகையில் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே விராட் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்க மறுத்ததால் அவர் இந்த முடிவை மேற்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கேப்டன் பதவிக்கு ஆசை.. சிக்கலில் மாட்டிய ஜெய்ஸ்வால்.. அவங்க மனசு வச்சாதான் கிரிக்கெட்டே ஆட முடியும் – எம்சிஏ செயலாளர்

ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த வீரர்கள் பலரிடம் இதுதான் எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? அல்லது ஆஸ்திரேலியா தொடர் அவரது கடைசி தொடராக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் பிசிசிஐ புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை இன்னும் சில தினங்களில் வெளிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -