ஹர்திக் மாதிரி இருக்கணும்னு.. எல்லாருக்கும் ஆசைதான்.. ஆனா இந்த விஷயம் அவங்கள தடுக்கும் – மோகித் சர்மா பேட்டி

0
40
Mohit sharma and Hardik pandya

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவர் அதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் குஜராத் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் குஜராத் அணியில் விளையாடி வரும் பந்துவீச்சாளரான மோகித் சர்மா ஹர்திக் பாண்டியாவின் ஆளுமை திறன் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா மிகத் திறமையான பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் என களத்தில் ஒரு குறையும் இல்லாமல் தனது செயல் திறனை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் அதைத் தாண்டி தனது சொந்த செயல்பாடுகளில் அவரிடம் சில வருத்தத்துக்குறிய விஷயங்கள் இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அதாவது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில் குஜராத் அணி அவரை வாங்கி கேப்டன் ஆக்கியது.

இருப்பினும் மும்பை அணி திரும்ப அழைக்க குஜராத் அணியில் இருந்து வெளியேறி திரும்பவும் மும்பை அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கினார். அதாவது தன்னை கேப்டன் ஆக்கி அழகு பார்த்த குஜராத் அணியை எளிதாக விட்டுவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றது குறித்து ரசிகர்கள் அப்போது தங்கள் விமர்சனங்களை முன் வைத்தார்கள். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியாவின் உண்மையான குணம் குறித்து மோஹித் சர்மா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒவ்வொரு நபருக்கும் தவறாக புரிந்து கொள்வது என்பது வித்தியாசமாக இருக்கும். நான் அடக்கமாக இருக்க விரும்புகிறேன் என்றால் எல்லாரும் தாழ்மையாக இருக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. அதை அதிகமாக வெளிப்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள். நம் சமூகத்திலிருந்து அப்படி ஒருவர் வெளியே வந்தால் அதை ஏற்றுக் கொள்வது என்பது கடினம்.

ஒரு சிறந்த உதாரணம் கூறுவது என்றால் நாம் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து ஒருவர் மழையை ரசிப்பதைப் பார்க்கிறோம். நாமும் அதைச் செய்ய விரும்புவோம். ஆனால் நமது தயக்கம்தான் நம்மை தடுக்கும். அதேபோல்தான் எல்லாரும் ஹர்திக் பாண்டியாவை போல இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்களால் அவர் போல இருக்க முடியாது. ஒரு மனிதராக ஹர்திக் பாண்டியா மிகவும் நல்ல மனிதர்.

இதையும் படிங்க:கோலி கண்டிப்பா இந்த விஷயத்தை செய்யனும்.. அப்போதான் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெயிக்க முடியும் – பிராட் ஹாக் கருத்து

பழகுவதற்கு இனிமையானவர், மற்றும் எளிதாக அவருடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவர் எப்போதும் ஆரோக்கியமான உறவை மேம்படுத்துவார். உலகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியமல்ல. ஒரு தலைவராக முன்னேற எப்போதும் சில வாய்ப்புகள் உண்டு. ஹர்திக்கிடம் இருக்கும் ஒரு மிகப்பெரிய குணம் என்னவென்றால் அவர் தன்னைத்தானே ஊக்கப்படுத்தி வீரர்களையும் ஊக்கப்படுத்துவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -