இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் அவர் இப்போது ஓய்வு முடிவை எடுத்தது தவறானதாகும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் திலீப் வெங்கர்சர்கார் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ரோகித் சர்மா ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலமாக இறக்கங்களை சந்தித்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் தோல்வியடைந்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. அப்போது கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் திரும்பவும் இந்திய அணி விளையாடும் நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனை பிசிசிஐ விரும்புவதாக தகவல்கள் வெளியான நிலையில் ரோஹித் சர்மா உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் அவர் எடுத்தது தவறான முடிவு என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்கர்சர்கார் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
தப்பான முடிவு எடுத்துட்டாரு
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசும் போது விரைவாக அவரது லென்த்தை சரியாக தேர்ந்தெடுக்கும் திறமை ரோகித் சர்மாவிடம் உள்ளது. இது அவரை முன்கால் அல்லது பின் காலில் தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. பந்து வீச்சாளர் அல்லது நிலைமைகள் குறித்து ரோகித் சர்மா ஒருபோதும் அழுத்தம் கொடுக்க மாட்டார். அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர் ஒருவரை இந்திய அணி நிச்சயமாக மிஸ் செய்யும் என்று நான் பயப்படுகிறேன்.
இதையும் படிங்க:இந்திய அணிக்கு புது சிக்கல்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியும் ஓய்வு.. பிசிசிஐ செயலாளர் கூறிய திடுக்கிடும் தகவல்
அவர் இதே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 2021ஆம் ஆண்டு அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். நிறைய பந்துகளை விட்டுவிட்டு ஏதுவான பந்துகளை மட்டும் பேட்டிங் செய்தார். எனவே இது போன்ற ஒரு தொடக்க வீரரை இந்திய அணி நிச்சயமாக மிஸ் செய்யும்” என அவர் கூறியிருக்கிறார். எனவே ரோஹித் சர்மா இல்லாத நிலையில் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் அல்லது கே எல் ராகுல் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் கேப்டனுக்கான அடுத்த பட்டியலில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புதிய இந்திய கேப்டனை பிசிசிஐ விரைவாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.