இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலி ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து தொடர்
தற்போது நடைபெற்று வந்த ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதை அடுத்து இந்திய அணி அடுத்ததாக வருகிற ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இளைஞர்களுக்கு வழி விடும் வகையில் ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனை தேடும் முயற்சியில் இந்திய அணி இறங்கி இருக்கிறது.
எனவே அடுத்த கேப்டனுக்காண தேர்வில் ரிஷப் பண்ட், கில் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆச்சரியம் அளிக்கும் தகவலாக விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு முன்பாக ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ இடம் கூறி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
விராட் கோலியும் ஓய்வு
பிசிசிஐ செயலாளரான தேவஜித் சைகியா இந்தியா டுடே பத்திரிகையிடம் விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு முன்பாக தான் ஓய்வு பெற விரும்புகிறேன் என கூறியதாக கூறியிருக்கிறார். இருப்பினும் ரோஹித் சர்மா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றால் சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறும் நிலை அதிகமாக இருக்கும்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025 திரும்ப தொடங்கும் போது.. தோனி கேப்டனாக இருப்பது சந்தேகம்.. காரணம் என்ன.?
எனவே விராட் கோலியின் முடிவை மறுப்பரிசீலனை செய்யுமாறு கூறியதாக பிசிசிஐ செயலாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவித்ததை தொடர்ந்து விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்து இருவரும் ஒரே நேரத்தில் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை விராட் கோலி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிசிசிஐ செயலாளர் கூறியிருக்கிறார்.