10 விக்கெட்டில் இந்திய அணியை தோற்கடித்தோம்.. ஆனா 2 வருஷத்தில் எல்லாம் மாற காரணம் அவர்தான் – பாக் இம்ரான் கான் விமர்சனம்

0
101
Imran

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இம்ரான் கான், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கும் மொஹ்சின் நக்வியை விமர்சித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி கூறியிருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி விளையாடியது.

இதில் சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்டிலேயே பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இம்ரான்கான் கிரிக்கெட் வாரிய தலைவர் குறித்த கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். மேலும் வங்கதேசம் அணிக்கு எதிரான தோல்வி அவமானகரமானது என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒட்டுமொத்த தேசமும் டிவியில் அமர்ந்து ஆர்வத்தோடு பார்க்கும் ஒரே விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே உள்ளது. ஆனால் அதுவும் தகுதியற்ற கட்டுப்பாடற்ற அதிகாரிகளால் கிரிக்கெட் விளையாட்டு அழிக்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் முதல் நான்கு அல்லது டி20யில் முதல் எட்டு இடங்களுக்குள் வரவில்லை.

மேலும் வங்கதேஷ அணிக்கு எதிராக ஒரு இக்கட்டான தோல்வியை சந்தித்தோம். இது தற்போது ஒரு புதிய தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. இதுவே 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பாக இதே அணிதான் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைய வைத்தது. தற்போது வங்கதேச அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறது என்றால் இந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் என்ன நிகழ்ந்தது?

இதையும் படிங்க : துலீப் டிராபி 2024.. 3 இந்திய நட்சத்திர வீரர்கள் ரூல்டு அவுட்.. கேப்டன் ருதுராஜுக்கும் பின்னடைவு.. மாற்று வீரர்கள் அறிவிப்பு

இது அனைத்திற்கும் பழி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் மீது விழுகிறது. கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வியடைந்த போது அணியில் மாற்றங்களை செய்யப் போவதாக கூறினீர்கள். மக்களை அமைதியாக இருக்க வைக்க அவ்வாறு கூறினீர்கள். ஆனால் சொன்னது போல் செய்தீர்களா? கிடையாது மற்றவர்கள் போலவே நீங்களும் பொய் சொல்லி இருக்கிறீர்கள்” என்று கூறுகிறார்

- Advertisement -