2024 செப்டம்பர் 5ஆம் தேதி முதல் இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலீப் டிராபி ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் முக்கிய மூன்று இந்திய வீரர்கள் இந்த தொடரில் இருந்து திடீரென வெளியேறி இருக்கிறார்கள். ருதுராஜ் தலைமை தாங்கும் சி அணியில் இருந்து இரண்டு நட்சத்திர வீரர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வாரியம் சில வீரர்களை தவிர்த்து மற்ற எல்லா இந்திய வீரர்களும் காயம் இல்லாமல் இருந்தாலும் இந்திய அணிக்கு விளையாடாமல் இருந்தாலும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கிறது. இதன் முதல் துவக்கமாக இந்த ஆண்டு துலீப் டிராபியில் பல இந்திய நட்சத்திர வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
மண்டல அணிகள் கலைப்பு
இதற்கு முன்பு துலிப் டிராபி ஆறு மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டு ஆறு அணிகள் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஏ,பி,சி,டி என நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அணிகளுக்கு சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன் ருதுராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என நான்கு கேப்டன்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்தத் தொடருக்கு தற்பொழுது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறார்கள். மீண்டும் 90கள் போல முக்கிய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதும், 40 நாட்களுக்கு மேல் இந்திய கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாமல் இருப்பதும் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
மூன்று முக்கிய வீரர்கள் விலகல்
இந்த நிலையில் அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக இருக்கும் பி டீமில் இருந்து மிக முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் என இரண்டு வீரர்கள் வெளியேறியிருக்கிறார்கள். இதில் முகமது சிராஜ் இடத்தில் இந்திய அணிக்காக விளையாடியிருக்கும் டெல்லி வீரர் நவ்தீப் சைனி இடம் பெற்று இருக்கிறார். ஜடேஜா இடத்திற்கு எந்த இடத்திற்கு எந்த வீரரும் அறிவிக்கப்படவில்லை. மேலும் அவரை விலகிய காரணமும் பிசிசிஐ தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க : தோனி கிடையாது.. விராட் கோலிதான் சிறந்த ஃபினிஷர்.. காரணம் இதுதான்.. ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து
அதே சமயத்தில் ருதுராஜ் கேப்டனாக இருக்கும் சி டீமில் இருந்து உடல்நல குறைவால் உம்ரான் மாலிக் வெளியேறி இருக்கிறார். இந்த அணியில் இவர் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார். இந்த நிலையில் இவர் வெளியேறியிருப்பது ருதுராஜ் அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. மேலும் இவருடைய இடத்திற்கு மத்திய பிரதேஷ் அணியைச் சேர்ந்த கௌரவ் யாதவ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.