“நாங்க இந்தியாவுல தோத்ததை மறந்துடுங்க; உலக டெஸ்ட் பைனலில் இருக்கு” – நாதன் லயன் சவால்

0
400
Lyon

உலக கிரிக்கெட்டில் இன்னும் சில நாட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிவப்புப்பந்துப் போட்டிகள் இங்கிலாந்தில் வைத்து நடக்க இருக்கின்றன!

இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன!

- Advertisement -

இதற்கு அடுத்து சில நாட்களில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் துவங்க இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிப் பெற்று இருந்தாலும், ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் வைத்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.

இந்த இரண்டு தொடர்கள் குறித்தும் பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் “ஆமாம் நாங்கள் இங்கு ஆசஸ் தொடர் விளையாட இருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னால் ஒரு மிகப்பெரிய போட்டியில் விளையாட இருக்கின்றோம். பின்னர் எங்களுடைய சீசன் அடிப்படையிலிருந்து துவங்குகிறது.

- Advertisement -

எங்களின் சிறப்பான திட்டமிடல்கள் மூலமாக நாங்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக தொடர முடியும். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்வதின் மூலம் மேலும் சரியாக இருக்க முடியும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஒரு அங்கமாக இருப்பது உற்சாகமாக இருக்கிறது. இந்தப் போட்டியைச் சுற்றி உள்ள ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களும் ஆசஸ் தொடரை எதிர்நோக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதற்கு முன்பாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்தும் அவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். இதில் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியாவில் சமீபத்தில் தோற்றதை நாம் துடைக்க முடியும்.

ஆஸ்திரேலியா இந்தியா இரு அணிகளுமே மிகச்சிறப்பாக இருக்கின்றன. வெளிப்படையாக சொல்வது என்றால் இந்தியாவில் நல்ல கிளாஸ் பேட்ஸ்மேன்களும், கிளாஸ் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.

இரண்டு சிறந்த ஸ்குவாடுகள் ஒரே போட்டியில் மோதிக் கொள்வது, மிகவும் சவால் அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். இது ஒரு புதிய தொடக்கம். நான் இதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!