மூன்று நான்கு நாட்களாக கிரிக்கெட்டை ஒதுக்கி வைத்து விட்டு இருந்தோம் ; கடந்த போட்டியின் தோல்வி காயப்படுத்தி விட்டது – கே.எல்.ராகுல்!

0
177
Rahul

இன்று ஐபிஎல் 16வது சீசனின் 38வது போட்டியில் பஞ்சாப் மைதானத்தில் மோதிக்கொண்ட பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது!

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 257 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச மொத்த மொத்தத்தை பதிவு செய்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியால் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதை அடுத்து தனது ஐந்தாவது வெற்றியை 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியது.

ஆனால் இதற்கு முன்பு கடைசி ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதிய போட்டியில் 136 என்ற எளிமையான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி வெற்றிக்கு மிக மிக அருகில் இருந்து கடைசியாக யாரும் எதிர்பாராத விதமாக 128 ரன் மட்டுமே எடுத்து ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி எந்த அணயாக இருந்தாலும் அதிகம் காயப்படுத்தி இருக்கும். ஏனென்றால் கேப்டன் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து வெற்றி கையில் இருந்தது.

- Advertisement -

தற்பொழுது பஞ்சாப் அணி உடனான போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் கே எல் ராகுல் ” டாஸ் ஜெயித்திருந்தால் நாங்களும் சேஸ் செய்யவே நினைத்திருப்போம். கடைசி ஆட்டம் தடுமாற்றமாக இருந்தது. அந்த ஆட்டத்தின் தோல்வி ஒரு அணியாக எங்களை எல்லோரையும் காயப்படுத்தியது. எங்களுக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் இடைவெளி இருந்தது. நாங்கள் எல்லோரும் கிரிக்கெட்டை விட்டு வெளியில் இருந்து மனம்விட்டு ஓய்வு எடுத்தோம். நாங்கள் எங்களுடைய மைதானத்தில் திரும்பி வந்து விளையாடும் பொழுது அது மிகுந்த சவாலானதாகத்தான் இருக்கும்.

ஆனால் இப்படிப்பட்ட ஆடுகளத்தை பார்க்கும் பொழுது பேட்ஸ்மேன்கள் உற்சாகமடைகிறார்கள். 250, 250 ரன்கள் பெறுவது எங்களது பேட்டிங் யூனிட்டை உயர்வாக காட்டுகிறது. கையில் மேயர்ஸ் முதல் மூன்று ஓவர்களில் எதிரணியின் பந்துவீச்சு மீது அழுத்தம் கொடுத்தார். அது எங்களுக்கு ஒரு நல்ல தொனியை கொடுத்தது. நாங்கள் அங்கிருந்து அதை சிறப்பாக முன்னெடுத்துக் கொண்டு சென்றோம்.

நாங்கள் ஆட்டத்தில் என்ன மாதிரியான யுக்திகளை பயன்படுத்தலாம் என்று அதிக நேரம் சிந்திக்கிறோம். கைய்ல், பூரன், ஸ்டாய்னிஸ் மூன்று பவர் ஹிட்டர்களை வைத்திருக்கிறோம். மற்றவர்கள் இவர்களைச் சுற்றி பேட்டிங் செய்கிறோம். நாங்கள் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வீரர்களை பயன்படுத்த நினைக்கிறோம். மேலும் அவர்களிடமிருந்து சிறந்ததை எப்படி பெறுவது!” என்று பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார்!