முதல் ஓவரில் ஐந்து பவுண்டரி ; பவர் பிளேவில் மொத்தம் 14 பவுண்டரி ; டெல்லியை அலறவிடம் ஜெய்ஸ்வால்!

0
106
Jaiswal

அசாம் மாநிலம் கவுகாதியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று பதினாறாவது ஐபிஎல் சீசனில் பதினோராவது போட்டி நடைபெற்று வருகிறது!

இரண்டு ஆட்டங்களில் விளையாடி உள்ள ராஜஸ்தான் ராயல் அணி ஒரு வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு ஆட்டங்கள் விளையாடி உள்ள டெல்லி அணி இரண்டையும் தோற்று இருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அணி இன்று டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

இதன்படி ராஜஸ்தான் அணிக்கு பட்லர் மற்றும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இருவரும் துவக்கம் தர களம் புகுந்தார்கள். முதல் ஓவரை கலில் அகமது வீசினார்.

முதல் பந்தில் இருந்து ஆரம்பித்தது ராஜஸ்தான் அணியின் அதிரடி. குறிப்பாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் தனது அபாரமான டச்சால் கிளாசிக் அதிரடியில் மிரட்டினார். முதல் ஓவரில் ஐந்து பவுண்டரிகள் கொட்டியது.

அதற்கடுத்த ஓவரில் பட்லர் 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். அக்சர் பட்டேல் வந்த ஐந்தாவது ஓவரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.

- Advertisement -

பவர் பிளே ஆறு ஓவரில் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் மொத்தம் 14 பவுண்டரிகளை மட்டும் நொறுக்கி அசத்தினார்கள். இதில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஒன்பது பவுண்டரிகள் பட்லர் 5 பவுண்டரிகள் அடித்தார்.

பவர் பிளே முடிந்து ஆறாவது ஓவரில் அக்சர் படேல் வர, அவரது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து 25 பந்தில் தனது அரை சதத்தை ஜெய்ஸ்வால் நிறைவு செய்தார். அடித்த ஐம்பது ரன்னில் 11 பவுண்டரிகள் மூலம் 44 ரன்களை கொண்டு வந்தார். தற்பொழுது ஜெய்ஸ்வால் 31 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார். முதல் விக்கட்டுக்கு 98 ரன்கள் இந்த ஜோடி எடுத்திருக்கிறது.