விராட்கோலிக்காக பாகிஸ்தானிலிருந்து வந்த ரசிகர்; விராட் கோலி செய்த செயல்!

0
100
Virat kohli

உலகின் எந்த மூலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதினாலும் அங்கு அந்த மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும். அந்தப் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சிக்கு விளம்பரதாரர்கள் வந்து குவிவார்கள். அந்த ஒரு போட்டியை பற்றி வைத்து மிகப்பெரிய வணிகம் நடைபெறும். அந்த அளவிற்கு இரு நாடுகள் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மிகுந்த முக்கியத்துவத்தை வரலாற்றாலும் அரசியலும் பெற்றிருக்கிறது!

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் மோதியதற்கு அடுத்து தற்போது யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்கும் ஆசியக் கோப்பை போட்டியில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. போட்டி நடக்கும் துபாய் மைதானத்தில் தான் கடந்த முறை டி20 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. ஒரு உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் முதல் வெற்றி இதுதான். கடந்த முறை நடந்த ஆசிய கோப்பை போட்டியில் மோதிய இரண்டு முறையும் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதாக வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆசிய கோப்பை போட்டிகளில் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச்சிறந்த தரவுகளை வைத்திருக்கும் விராட் கோலியின் பேட்டிங் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. காரணம் அவர் சமீபத்தில் தனது பேட்டிங் பார்மை இழந்திருந்தார். மேலும் அவரோடு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை வைத்து ஒப்பீடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே தற்போது நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் வெல்லும் அணி யார் என்பதை விட விராட் கோலியா பாபர் ஆசமா என்ற எதிர்பார்ப்பு தான் அதிக அளவில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து 3 வாரங்கள் ஓய்வில் இருந்த விராட்கோலி ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்குள் திரும்ப வந்திருக்கிறார். தற்பொழுது இந்திய அணி புதன்கிழமையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி அகாடமி மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இங்கு ரசிகர்களின் கூட்டம் பெரிய அளவில் இருக்கிறது.

பயிற்சியின்போது விராட் கோலியை பார்ப்பதற்கும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள் பெரிய அளவில் போட்டிபோட்டுக்கொண்டு படையெடுத்த வண்ணம் உள்ளனர். விராட் கோலிக்கு ரசிகர்கள் என்பது எல்லை தாண்டி இருக்கிறது. அவருக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்

- Advertisement -

விராட் கோலி பயிற்சியை முடித்து விட்டு நடந்து செல்லும்பொழுது அவரிடம் தூரத்தில் இருந்த ஒரு ரசிகர் ” நான் உங்களைப் பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக மட்டுமே பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்திருக்கிறேன்” என்று கத்தினார். இதைக்கேட்ட விராட் கோலி அவரைத் தடுத்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவரை விடச் சொல்லி, அந்த ரசிகர் ஓடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார். அந்த ரசிகரின் பெயர் மோகமத் ஜிப்ரான்.

இதுபற்றி அந்த ரசிகர் கூறும்பொழுது ” நான் எந்த விளையாட்டு வீரருக்கும் ரசிகன் கிடையாது. ஆனால் விராட் கோலிக்கு நான் ரசிகன். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நான் பாகிஸ்தானில் இருந்து வந்து ஒரு மாதமாக இங்கு காத்திருக்கிறேன். இன்று பயிற்சியை முடித்துக்கொண்டு செல்லும்பொழுது நான் இது பற்றி கூறவும், நின்று என்னோடு செல்பி எடுத்துக்கொண்டார். அவர் ஒரு திறமையான வீரர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர். இதற்காகவே அவரை எனக்காக நிறைய பிடிக்கும். அவர் மீண்டும் பேட்டிங் பார்முக்கு வரவேண்டும். அது பாகிஸ்தான் அணியுடன் நடந்தாலும் கவலையில்லை. நான் இதுவரை பாகிஸ்தான் வீரர்களுடனும் புகைப்படம் எடுத்ததில்லை” என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்!