கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை செயின்ட் லூசியா கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இதில் செயின்ட் லூசியா அணியின் ராஸ்ட்டன் சேஸ் அதிரடியாக விளையாடி செயின்ட் லூசியா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் போன்று வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் என்ற டி20 வடிவ கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று தொடங்கிய இறுதிப் போட்டியில் இம்ரான் தாகிர் தலைமையிலான கயானா அணியும் டுப்ளஸ்சிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகளும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கடைசி வரிசை பேட்ஸ்மேன் ப்ரிட்டோரியஸ் 12 பந்துகளில் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 25 ரன்கள் குவித்தார். இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நூர் அகமது நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி செயின்ட் லூசியா அணி களம் இறங்கியாது. அந்த அணியின் கேப்டன் ஆன தொடக்க ஆட்டக்காரர் டுப்ளஸ்சிஸ் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதற்குப் பிறகு பத்து ஓவர்களில் 51 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்த நிலையில் செயிட் லூசியா அணி தடுமாறியது. அதற்குப் பிறகு ஓரளவு விளையாடி 30 பந்துகளுக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலையில் பின் ஜோடி சேர்ந்த ஜோன்ஸ் மற்றும் சேஸ் ஆகியோர் சரிவில் இருந்த அணியை மீட்டு எடுத்தார்கள்.
இதில் குறிப்பாக ஆட்டத்தின் 16 வது ஓவரை தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடும் மொயின் அலி வீச அதனை எதிர்கொண்ட ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜோன்ஸ் ஜோடி ஒரே ஓவரில் மூன்று சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் என 27 ரன்களை குவித்தது. அந்த ஒரே ஓவரில் ஆட்டம் செயிண்ட் லூசியா பக்கம் திரும்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : தோனி விராட் ஸ்பெஷல் சாதனையை.. உடைத்த ஹர்திக் பாண்டியா.. டி20யில் இந்தியராக புதிய ரெக்கார்ட்
இதன் மூலம் செயின்ட் லூசியா அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா கரீபியன் லீக் தொடரில் செயின்ட் லூசியா அணியின் உரிமையாளரும் ஆவார். பஞ்சாப் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு சாம்பியன் கோப்பையை கூட கைப்பற்றாத நிலையில் செயின்ட் லூசியா அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.