“இந்தியா கூட தோத்தா எந்தப் பிரச்சனையும் கிடையாது” – பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பரபரப்பு கருத்து!

0
1618
Sadhap khan

இந்த வருடம் அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முதல் முறையாக முழுமையாக நடைபெற இருக்கிறது!

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதும் போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக ரசிகர்களாலும் வீரர்களாலும் பார்க்கப்படுகிறது!

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி உடன் தோற்றது கிடையாது என்ற பெருமை 2021 டி20 உலகக் கோப்பை வரை இருந்தது. அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்க அந்தப் பெருமை முடிவுக்கு வந்தது.

அதே சமயத்தில் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வெல்ல விட்டதில்லை என்கின்ற சாதனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சதாப் கான் பேசும் பொழுது ” இந்தியாவுடன் விளையாடுவது ஒரு வித்தியாசமான மகிழ்ச்சி. அந்தப் போட்டியில் இருக்கும் ஒட்டுமொத்த அழுத்தமும் வேறு மாதிரியானது. இப்போது நாங்கள் அங்கு செல்லும் பொழுது அது அவர்களின் சொந்த மைதானமாக இருக்கிறது.

- Advertisement -

அங்கு கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும். நாங்கள் அங்கு உலகக் கோப்பையில் விளையாட போகிறோம். எனவே நாங்கள் இந்தியா பற்றி சிந்திப்பது போல உலகக்கோப்பை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

ஏனென்றால் நாங்கள் இந்தியாவை வென்று உலகக் கோப்பையை வெல்லாமல் தோற்றால் அதனால் எங்களுக்கு எந்தப் பலனுமே கிடையாது. அது வீன்தான்.

என் கருத்துப்படி நாங்கள் இந்தியாவுடன் தோற்று உலகக் கோப்பையை வென்றால் அதுதான் முக்கியமான வெற்றி. எங்களுடைய நோக்கமும் அதுதான்!” என்று கூறியிருக்கிறார்!