இன்று டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் மிகவும் முக்கியமான போட்டி நடைபெற்றது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தொடரை நடத்தும் வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதினர். இந்தப் போட்டியில் பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக செயல்பட்ட இங்கிலாந்து, பேட்டிகள் அதிரடியாக விளையாடி வெஸ்ட் இன்டீஸை வென்றது. வெற்றிக்கான காரணங்கள் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீசியது. மற்றும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 180 ரன்கள் மட்டுமே பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் எடுக்க முடிந்தது. ஆதில் ரஷீத் நான்கு ஓவரில் 21 ரன் மட்டுமே தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஓவர்களுக்கு 32 ரன் தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பில் சால்ட் 47 பந்தில் 87 ரன்கள், நான்காவது இடத்தில் வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து 17.3 ஓவரில் போட்டியை முடித்து விட்டார்கள். சூப்பர் கேட்டு சுற்றில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றி இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பை மிகப் பிரகாசப்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் வெஸ்ட் இண்டிஸ் அரையிறுதி வாய்ப்பை குறைத்து இருக்கிறது.
வெற்றிக்குப் பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் “இது எங்களின் சிறப்பான வெற்றி. பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை 180 ரன்கள் கட்டுப்படுத்தியது சிறப்பான ஒன்று. இதற்கடுத்து ரன் சேசிங்கில் நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்தோம்.சால்ட் மற்றும் பேர்ஸ்டோ இடையே நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தது.
நான் திரும்ப ஜோப்ரா ஆர்ச்சரை உள்ளே கொண்டு வந்தேன். பூரன் மற்றும் ரசல் இருவரும் உலகத்தரம் வாய்ந்த டி20 பேட்ஸ்மேன்கள். இதன் காரணமாக எங்களின் சிறந்த பந்துவீச்சாளர்களை அந்த நேரத்தில் அழைத்து வந்தேன். ஆதில் ரஷீத் எங்களின் முக்கியமான வீரர். அவரிடம் பல வேரியேஷன்கள் இருக்கிறது. அவர் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தினார்.
இதையும் படிங்க : மேட்ச்ல இந்த 3 விஷயங்களை கவனிச்சேன்.. அத வச்சுதான் ஒரு ஓவர்ல 30 ரன் அடிச்சேன் – பில் சால்ட் பேட்டி
மேலும் ஜானி பேர்ஸ்டோ ஒரு கிளாஸ் பிளேயர். நாங்கள் எங்களின் கிளாஸ் பிளேயர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் தோற்கும் போது கற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள். ஆனால் வெற்றி பெறும் பொழுதும் கற்றுக் கொள்ள முடியும். எங்கள் செயல் திறன் பற்றியும் மேலும் அடுத்த ஆட்டம் பற்றியும் கவனம் செலுத்துவது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.