கவலைப்படாதிங்க.. 2023 உலக கோப்பை நம்பர் 4க்கு பேட்ஸ்மேன் கிடைச்சாச்சு – ரோஹித் சர்மா மாஸ் அப்டேட்!

0
2195
Rohitsharma

இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் எல்லா அணிகளும் ஈடுபட்டு இருக்கின்றன!

சொந்த நாட்டில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதனால் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இதனுடன் சேர்ந்து ஒரு நாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டிய மிக முக்கிய வீரர்கள் காயத்தில் இருப்பது அணியை மிகவும் பின்னடைவுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு தேவையான இடங்களுக்கு கண்டறியப்பட வேண்டிய வீரர்களை, தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் விளையாட வைத்து பரிசோதிக்கும் அளவுக்கு நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கும் கேஎல்.ராகுல் அணிக்குத் திரும்புவாரா? இரண்டாவது விக்கெட் கீப்பர் இஷான் கிசானா அல்லது சஞ்சு சாம்சனா? இந்திய அணிக்கு நான்காவது இடத்தில் விளையாடப் போவது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயரா இல்லை சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவா? என்பது போன்ற பல கேள்விகள் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ்க்கு அருகில் உள்ள அமெரிக்க நாட்டின் மகாணமான கலிபோர்னிய மாகாணத்தில், தன்னுடைய கிரிக்கெட் அகாடமியை துவக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பல முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதில் பங்கேற்று பேசிய ரோஹித் சர்மா பேசும் பொழுது ” ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து வருவதில் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறார். அவர் தனது மறுவாழ்வில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். எனவே அவர் முழு உடல் தகுதியுடன் நமக்கு கிடைப்பார் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் நேற்று வெளிவந்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்த செய்தியில், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே அடுத்து நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணிகள் இடம் பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒரு வேலை நடந்தால் இந்திய அணியின் உலகக் கோப்பை தயாரிப்புகளில் பெரிய முன்னேற்றத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.