“கோலி இடத்துக்கு ரகானே புஜாரா வேண்டாம்.. இந்த ரெண்டு சூப்பர் பசங்கள கொண்டு வாங்க” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி ஐடியா

0
1648
Virat

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருக்கிறார்.

கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் என இரு தரப்புக்கும் தன்னுடைய சூழல் என்ன என்பதை அவர் புரிய வைத்து வெளியேறி இருப்பதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருடைய முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி தொடர்ச்சியாக நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக எப்பொழுதும் அவர் மிகவும் போட்டித் தன்மையுடன் விளையாட கூடியவர். எனவே உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவுதான். ஆனாலும் தொடர் இந்தியாவில் நடப்பதால் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு புஜாரா, ரகானே போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளாக வாய்ப்புக்காக காத்திருக்கும் சர்ப்ராஸ் கான் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து கூறும் பொழுது ” நான் ஒரு இடது கையை ஆட்டக்காரரை தேர்வு செய்கிறேன். அவர் தேவ்தத் படிக்கல். அவர் எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரமாக இருந்தார். ஆனால் அவர் தற்பொழுது நிகழ்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாகவே மாறலாம். அவர் சமீபத்தில் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் தற்போது வேறு லெவலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார், எங்கு விளையாட விட்டாலும் ரன்கள் எடுப்பார்.

- Advertisement -

மேலும் வேகம் மற்றும் ஸ்பின் என இரண்டிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவர் மூன்று வடிவத்திலும் இந்திய அணியில் விளையாட வேண்டியவர். 2023 ஐபிஎல் தொடருக்கு பின்பாக அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாறியிருக்கிறார். அவர்தான் அடிக்காத இடங்களே கிடையாது. அப்படியானால் அவரை ஏன் கோலி இடத்தில் தேர்வு செய்யக்கூடாது?

ரஜத் பட்டிதாரின் ஆட்டங்கள் அற்புதமானவை. காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருந்தால். ஆனால் திரும்ப வந்து ரன்கள் குவிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.

நிறைய பேர் இவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே பார்த்திருப்பார்கள். ஐபிஎல் தாண்டியும் இவரை பார்க்க வேண்டும். இவர் தற்பொழுது உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். மிடில் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேன் ஆக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.