“சூரியகுமாருக்கு இடம் தராதிங்க.. தந்தா இத செய்யுங்க!” – கவாஸ்கர் வெளிப்படையான அட்வைஸ்!

0
1781
Surya

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்க இருக்கிறது.

நடைபெற இருக்கும் பயிற்சி போட்டிகள் கவுகாத்தி, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி தமது முதல் பயிற்சி போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்திற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் இரவு நெடுநேரம் கழித்து இறுதியாக உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் ஒரே ஒரு மாற்றமாக அக்சர் பட்டேல் காயம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றார்.

இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் பெரிய குறைகள் என்று எதுவுமே கிடையாது. எல்லா வீரர்களுமே தங்களுடைய ரோலில் மிகச் சிறப்பாக இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த காரணத்தினால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த முறை இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

தற்போது விளையாடும் அணி யாரைக் கொண்டு அமைப்பது என்பதுதான் சற்று குழப்பமாக இருக்கிறது. இது குறித்து கவாஸ்கர் கூறும் பொழுது “ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் இன்னும் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவர் இறுதியாக 15 முதல் 20 ஓவர்கள் வரை மட்டுமே பேட்டிங் செய்கிறார். இதற்கு அவர் தனது டி20 திறன்களை பயன்படுத்துகிறார். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

ஆனால் ஹர்திக், ராகுல், இஷான் யாரும் இவர் செய்யும் வேலையை செய்ய முடியும். எனவே ஸ்ரேயாஸ் ஐயருக்கு நான்காம் இடம் உறுதியான ஒன்று. சூரியகுமார் காத்திருக்க வேண்டும். அவருக்கு நான்காம் இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெரிய சதம் அடிக்க வேண்டும். அவர் தன்னால் ஒரு சதம் அடிக்க முடியும் என்பதை காட்ட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!