அரிய அந்த திறமை இருக்க பையன்.. ப்ளீஸ் ஆஸி தொடருக்காவது செலக்ட் பண்ணுங்க – தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்

0
117
Harshit

இந்திய அணி நாளை மறுநாள் உள்நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னையில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் கேகேஆர் இளம் நட்சத்திர வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி மிக நீண்ட ஓய்வில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஓய்வுக்குப் பிறகு பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருக்கிறது. இங்கிருந்து இந்திய அணி அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா கோடை காலம்

இந்திய அணி விளையாட இருக்கும் 10 டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமானதாக ஆஸ்திரேலியா சென்று விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கும் முக்கியமான தொடராகவே அது அமைந்திருக்கிறது. எனவே இரு அணிகளும் திட்ட ரீதியாக பலமாக தயாராகிக் கொண்டிருப்பது எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறது.

இந்தத் தொடருக்கு ஒரு குறிப்பிட்ட வீரரை கட்டாயம் இந்திய அணியில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். மேலும் அந்த வீரரை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே தேர்வு செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அபாரமான பேக் ஸ்பின் இருக்கிறது

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஹர்ஷித் ராணா அவருக்கு சிறப்பான திறமை இருக்கிறது. அவருடைய பந்துவீச்சில் நல்ல பேக் ஸ்பின் இருக்கிறது. சிறப்பான முறையில் பந்து லேண்ட் ஆகிறது. அவர் மிகவும் திறமையான வேகப்பந்துவீச்சாளர் எனவே அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு கூட்டிச் செல்ல விரும்புகிறேன். அங்கு அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் நம்புகிறேன்”

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய தொடர்.. தில்ஷான் மகளுக்கு இலங்கை மகளிர் அணியில் இடம்.. U19 முத்தரப்பு கிரிக்கெட்

“தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய அணியில் நான் திருப்தியாக இருக்கிறேன். ஆனாலும் ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்வார்கள் என நான் நினைத்தேன். அவர் சிறப்பாக பந்து வீசியதால் வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றியது. ஆனால் இந்திய அணியில் சரியான 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -