எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது… சீக்கிரமே கம்பேக் கொடுப்பேன் – காயத்திற்கு அப்டேட் கொடுத்து நம்பிக்கையுடன் பேசிய கேஎல் ராகுல்!

0
293

அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது. விரைவில் என்னுடைய கம்பேக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் ட்வீட் செய்துள்ளார் கேஎல் ராகுல்.

ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த கேஎல் ராகுல் இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பை ஏற்பட்டு படுகாயமும் அடைந்தார். இதனால் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார் பேட்டிங் இறங்கவில்லை. வேறு வழி இன்றி 9 விக்கெட் இழந்த பிறகு உள்ளே வந்தார்.

- Advertisement -

அதற்கு அடுத்தடுத்த லீக் போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடவில்லை. லக்னோ அணிக்கு க்ருனால் பாண்டியா தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர். ஆகையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருந்தும் விலகுகிறார் என்று அதிர்ச்சிகரமான அறிவிக்கப்பட்டது. அடுத்த இரு தினங்களிலேயே மாற்றுவீரரும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

- Advertisement -

நேற்றைய தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் கேஎல் ராகுல். கடினமான அறுவை சிகிச்சை செய்த பிறகு, இப்போது எப்படி இருக்கிறது? என்பதை பற்றிய அப்டேட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் பதிவிட்டதாவது:

“என்னுடைய காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். வெற்றிகரமாக முடிந்தது இதற்கு பக்கபலமாக இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இப்போது நான் சௌகரியமாக இருக்கிறேன். எல்லாம் எளிமையாக முடிந்துவிட்டது.

இப்போது காயத்திலிருந்து குணமடையும் தருணத்திற்கு வந்துவிட்டேன். விரைவில் குணமடைந்து என்னுடைய ஆட்டத்திற்கு திரும்புவேன் கம்பேக் கொடுப்பேன்.” என்றார்.

கேஎல் ராகுல் இந்த காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இதன்படி அடுத்து வரவிருக்கும் ஆசியக்கோப்பையில் கேஎல் ராகுல் இடம்பெறுவது சந்தேகம்தான் என்றும், நேரடியாக உலகக்கோப்பைக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.