தோனி அவுட் ஆனதை கொண்டாடிய சிஎஸ்கே வீரர் ; கண்டித்த சிஎஸ்கே; விளக்கம் அளித்த வீரர்!

0
3599
Dhoni

நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முக்கியமான போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடி வென்றது.

இந்தப் போட்டியில் களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடக்கம்.

- Advertisement -

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி ஆட்டம் இழந்து பெவிலியன் நோக்கிப் போகையில், பதிரனா அதைக் கொண்டாடும் விதமாக பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் செலிப்ரேஷன் செய்வது போல புகைப்படங்கள் வந்தது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மகேந்திர சிங் தோனி ஆட்டம் இழந்ததை அந்த அணியின் வீரரே கொண்டாடுகிறார் என்று பரவியது.

இந்த நிலையில் சிஎஸ்கே அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் “பதிரனா இது உங்களின் வழக்கமான கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல!” என்று கிண்டலாக பதிவிட்டு இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள பதிரனா “நான் அவரின் விக்கெட் விழுந்ததை கொண்டாடவில்லை. நான் அடுத்து பந்து வீசுவதற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டு இருந்தேன். அது புகைப்படத்தில் அப்படி வந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

முதலில் பரவிய அந்தப் புகைப்படமும் அதற்குப் பிறகு கிண்டலாக சிஎஸ்கே அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வந்த பதிவும் அதற்கு விளக்கம் கூறியுள்ள பதிரனாவின் பதிலும் சுவாரசியமான நிகழ்வுகளாக அமைந்திருக்கிறது!